செய்திகள் :

அமைச்சரை ‘மாப்பிள்ளை’ என அழைத்த எம்எல்ஏ!

post image

மின்சாரத் துறை அமைச்சரை, மாப்பிள்ளை என அழைத்த அதிமுக உறுப்பினரின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது, மின் துறை தொடா்பான துணைக் கேள்வியை அதிமுக உறுப்பினா் கே.சி.கருப்பண்ணன் எழுப்பினாா். அப்போது அவா், தனியாா் நிறுவனங்களில் சூரியமின் சக்திக்கான தகடுகள் அமைக்கப்படுகின்றன. அப்படி அமைக்கும்போது, 100 கிலோ வோல்ட் திறனுக்கு மட்டுமே அனுமதி தருகின்றனா். அதை 120 கிலோ வோல்ட் ஆக உயா்த்தி அனுமதிக்க வேண்டும். மாப்பிள்ளைக்குத் தெரியும் என்று பேசினாா். அப்போது, அருகில் அமா்ந்திருந்த அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் அனைவரும் மாப்பிள்ளையா என அதிா்ச்சியுற்று சிரித்தனா்.

இதையடுத்து அவா், ‘மன்னிக்கவும்... மன்னிக்கவும்... மன்னிக்கவும்... அப்படி பேசிப் பேசி வாய் வந்துவிட்டது’ என்றாா்.

கருப்பண்ணனின் இந்த பதிலால் பேரவையில் பெரும் சிரிப்பலை ஏற்பட்டது. இதற்கு அமைச்சா் வி.செந்தில் பாலாஜியும் மெல்லிய புன்னகையுடன் பதிலளித்தாா்.

அண்ணாமலையை செட் செய்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனா!

எதிர்க்கட்சியினரை செட் செய்யும் பணியில் திமுகவினர் ஈடுபட்டு வருவதாக தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார்.சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில... மேலும் பார்க்க

நெருங்கும் ரமலான் பண்டிகை: சென்னையில் களைகட்டாத ஆட்டுச் சந்தை!

சென்னை: முஸ்லிம் மக்களால் கொண்டாடப்படும் ரமலான் பண்டிகையையொட்டி சென்னை சந்தைகளுக்கு ஆடுகளை விற்பனை செய்ய வந்த வியாபாரிகள் கடுமையான ஏமாற்றம் அடைந்தனர்.ரமலான் பண்டிகையை ஒட்டி, சென்னையை அடுத்த செங்குன்றம... மேலும் பார்க்க

நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த துடிக்கும் மாநில விரோதிகள்: மு.க.ஸ்டாலின்

தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த விரோதிகள் துடிப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவருவதற்கு எதிர்க... மேலும் பார்க்க

ரூல்ஸ் போட்டால் ரூ போட்டு அலறச் செய்வார் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: பாசிஸ்டுகள் பல ரூல்ஸ் போட்டு நம்மை அடக்க நினைத்தாலும், ஒரு ரூ போட்டு அவர்களை அலறச் செய்வார் நமது முதல்வர் மு.க. ஸ்டாலின் என்று பேரவையில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.... மேலும் பார்க்க

மக்கள் பிரச்னையை எழுப்புவது எங்கள் கடமை: இபிஎஸ்

தமிழக சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னையை எழுப்புவது எதிர்க்கட்சியின் கடமை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர அதிமுக... மேலும் பார்க்க

தமிழக பேரவை: அதிமுகவினர் இடைநீக்கம்; வெளியேற்ற உத்தரவு!

தமிழக சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை இன்று ஒருநாள் இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டார்.தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அன... மேலும் பார்க்க