செய்திகள் :

நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த துடிக்கும் மாநில விரோதிகள்: மு.க.ஸ்டாலின்

post image

தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த விரோதிகள் துடிப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவருவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று முயற்சித்தார்.

ஆனால், முன்பே அனுமதி பெறாததால் அனுமதிக்க முடியாது என்று பேரவைத் தலைவர் அப்பாவு நிராகரித்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், ஒருநாள் இடைநீக்கம் செய்து அவர்களை வெளியேற்ற அப்பாவு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

”தமிழ்நாட்டில் பொது அமைதி நிலவுகிறது. பெரிய சட்டம் - ஒழுங்கு பிரச்னையின்றி மக்கள் அமைதியாகவும் இணக்கமாகவும் வாழ்கின்றனர். இதனால்தான் முதலீடுகள், தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் என தமிழகம் முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.

இதனை தாங்கிக் கொள்ள முடியாத மாநில விரோத சக்திகள், தமிழ் மக்கள் விரோத சக்திகள், அங்கொன்றும் இங்கொன்றும் நடைபெறும் கொலை, கொள்ளை நிகழ்வுகளை ஊதிப் பெருசாக்கி, இரவுபகலாக பணிபுரியும் தமிழக காவல்துறைக்கு இழுக்கு ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்கு பிரதான எதிர்க்கட்சியும் துணைபோகிறது.

தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த துடிக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் எத்தனை கலவரங்கள் ஏற்பட்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதுபோன்று தற்போது நடைபெறுவதில்லை. தவறு செய்பவர் ஆளுங்கட்சியினராக இருந்தாலும் வழக்குப் பதிந்து, கைது செய்யப்படுகிறார்கள்.

சில சமயங்களில் நடைபெறும் தொடர் சம்பவங்களால் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டதாக மக்களிடம் வீண் புரளியைக் கிளப்பாமல் எதிர்க்கட்சித் தலைவரும், அவர் கூட்டணி வைக்கத் துடிக்கும் கட்சியினரும் ஆக்கப்பூர்வ அரசியல் செய்ய முன்வாருங்கள்.” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க : தமிழக பேரவை: அதிமுகவினர் இடைநீக்கம்; வெளியேற்ற உத்தரவு!

எரிவாயு டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்!

தென்மாநிலங்கள் முழுவதும் 4 நாட்களாக நீடித்து வந்த எல்பிஜி டேங்கர் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள க... மேலும் பார்க்க

சமந்தா முதல் படத்தின் டீசர்! சீரியல் கதைகளுடன் தொடர்புடைய சுபம்!

சமந்தா தயாரித்துள்ள முதல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சுபம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், சீரியல் கதைகளை விரும்பிப் பார்க்கும் ஆவி புகுந்த பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்குப்... மேலும் பார்க்க

பிறை தென்பட்டது! நாளை ரமலான் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு

பிறை தென்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் நாளை (மார்ச் 31) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கியில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

எந்த ஒரு கட்சியையும் அழித்து வளராது பாஜக: அண்ணாமலை

எந்த ஒரு கட்சியையும் அழித்து பாஜக வளராது என்று அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி க... மேலும் பார்க்க

அவிநாசி: பத்திரப்பதிவுக்கான தடைச் சான்றை நீக்காததைக் கண்டித்து ஏப். 1-ல் போராட்டம்!

அவிநாசியில் திருமுருகன்பூண்டி கோயிலுக்குச் சொந்தமான இடத்தைத் தவிர மற்ற நிலங்களுக்கு பெற்றுள்ள பத்திரப் பதிவுக்கான தடை சான்றை நீக்காததைக் கண்டித்து, திருமுருகன்பூண்டி கோயில் செயல் அலுவலகம் முன் ஏப்ரல் ... மேலும் பார்க்க

ராமேசுவரம்: தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள்! உதவுகேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை

ராமேசுவரத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் நாடுதிரும்ப உதவுமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்தவர்கள், மீண்டும் தாயகம் திரும்ப உதவுமாறு மத்திய, மாநில அரசிட... மேலும் பார்க்க