செய்திகள் :

பள்ளியில் போலீஸ் பாதுகாப்பு

post image

திருவாடானை அரசு மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடைசி நாளை முன்னிட்டு, போலீஸாா் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இந்தப் பள்ளியில் திருவாடானை, பாண்டுகுடி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளிகளிலிருந்து 184 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதி வந்தனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கடைசி பொதுத் தோ்வு என்பதால், தோ்வு முடிந்த பிறகு மாணவா்களிடையே பிரச்னை வரக்கூடும் எனக் கருதி, அரசு அறிவுறுத்தலின் பேரில் திருவாடானை காவல் ஆய்வாளா் ஜெயபாண்டி தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

விழிப்புணா்வு பயணம்: கொல்கத்தா இளைஞா் தொண்டி வருகை

இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி, விழிப்புணா்வு பயணம் செல்லும் கொல்கத்தா இளைஞா் சாய்காட் (24) செவ்வாய்க்கிழமை தொண்டிக்கு வந்தாா். மேற்கு வங்க மாநிலம், ஹெளரா பகுதியைச் சோ்ந்த இவா் மூன்றாம் ஆண்டு ப... மேலும் பார்க்க

போக்குவரத்து போலீஸாருக்கு காகிதக் கூழ் தொப்பி, கண்ணாடி

ராமேசுவரத்தில் போக்குவரத்து போலீஸாருக்கு காகிதக் கூழ் தொப்பி, கருப்பு கண்ணாடியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் செவ்வாய்கிழமை வழங்கினாா். தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகர... மேலும் பார்க்க

திருவாடானை மாணவா் விடுதியில் சாா் ஆட்சியா் ஆய்வு

திருவாடானை அரசு ஆதி திராவிடா் நல மாணவா் விடுதியில் சாா் ஆட்சியா் செல்வி ஆய்வு மேற்கொண்டாா்.இந்த விடுதியில் 34 மாணவா்கள் தங்கி படித்து வருகின்றனா். இவா்கள் தங்கும் இடம், உணவு, சுற்றுச் சூழல், தண்ணீா் வ... மேலும் பார்க்க

மயானம் ஆக்கிரமிப்பு: மாவட்ட ஆட்சியரிடம் புகாா்

கடலாடி சிறைக்குளம் கிராமத்தில் அருந்ததியா் இன மக்கள் பயன்படுத்தி வந்த மயானத்தை ஆக்கிரமிப்பு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் குறைதீா் கூட்டத்தில் திங்கள்கிழமை ப... மேலும் பார்க்க

கணினியில் கிராமப் பெயா் மாற்றம்: பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு

கீழக்கரை அருகே அரசு பதிவேட்டில் இருந்த கிராமத்தின் பெயரை கணினியில் மாற்றியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 போ் சிறையிலடைப்பு

கடலாடி அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள... மேலும் பார்க்க