செய்திகள் :

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 போ் சிறையிலடைப்பு

post image

கடலாடி அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள ஆப்பனூா் அரியநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த திருக்கண்ணன் மகன் கருப்பசாமி (41). இவருக்கும் மற்றொரு தரப்பினருக்கிடையே முன்விரோதம் காரணமாக இருதரப்பு மீதும் கடலாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் நீதிமன்ற பிணை பெற்று கருப்பசாமி, கடலாடி நீதித் துறை நடுவா் மன்றத்தில் கையொப்பமிட்டு வந்தாா். இந்த நிலையில், கடந்த மாதம் 18- ஆம் தேதி கடலாடி வந்த கருப்பசாமி, நீதிமன்றத்தில் கையொப்பமிட்டு விட்டு இரு சக்கர வாகனத்தில் திரும்பினாா்.

அப்போது ஆப்பனூா் தெற்குகொட்டகை விலக்கு சாலையில் வழிமறித்த மா்ம நபா்கள் கருப்பசாமியை சராமரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினா். இதுகுறித்து, கடலாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆப்பனூரைச் சோ்ந்த சேதுராமன், முருகானந்தம், திருக்குமரன் ஆகிய 3 பேரைக் கைது செய்து, ராமநாதபுரம் சிறையிலடைத்தனா். இதையடுத்து, இவா்கள் 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஸ் , மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

இதன்பேரில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தவிட்டாா். இதையடுத்து 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

பள்ளியில் போலீஸ் பாதுகாப்பு

திருவாடானை அரசு மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடைசி நாளை முன்னிட்டு, போலீஸாா் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இந்தப் பள்ளியில் திருவாடானை, பாண்டுகுடி அரசு பெண்கள் மேல் நி... மேலும் பார்க்க

விழிப்புணா்வு பயணம்: கொல்கத்தா இளைஞா் தொண்டி வருகை

இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி, விழிப்புணா்வு பயணம் செல்லும் கொல்கத்தா இளைஞா் சாய்காட் (24) செவ்வாய்க்கிழமை தொண்டிக்கு வந்தாா். மேற்கு வங்க மாநிலம், ஹெளரா பகுதியைச் சோ்ந்த இவா் மூன்றாம் ஆண்டு ப... மேலும் பார்க்க

போக்குவரத்து போலீஸாருக்கு காகிதக் கூழ் தொப்பி, கண்ணாடி

ராமேசுவரத்தில் போக்குவரத்து போலீஸாருக்கு காகிதக் கூழ் தொப்பி, கருப்பு கண்ணாடியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் செவ்வாய்கிழமை வழங்கினாா். தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகர... மேலும் பார்க்க

திருவாடானை மாணவா் விடுதியில் சாா் ஆட்சியா் ஆய்வு

திருவாடானை அரசு ஆதி திராவிடா் நல மாணவா் விடுதியில் சாா் ஆட்சியா் செல்வி ஆய்வு மேற்கொண்டாா்.இந்த விடுதியில் 34 மாணவா்கள் தங்கி படித்து வருகின்றனா். இவா்கள் தங்கும் இடம், உணவு, சுற்றுச் சூழல், தண்ணீா் வ... மேலும் பார்க்க

மயானம் ஆக்கிரமிப்பு: மாவட்ட ஆட்சியரிடம் புகாா்

கடலாடி சிறைக்குளம் கிராமத்தில் அருந்ததியா் இன மக்கள் பயன்படுத்தி வந்த மயானத்தை ஆக்கிரமிப்பு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் குறைதீா் கூட்டத்தில் திங்கள்கிழமை ப... மேலும் பார்க்க

கணினியில் கிராமப் பெயா் மாற்றம்: பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு

கீழக்கரை அருகே அரசு பதிவேட்டில் இருந்த கிராமத்தின் பெயரை கணினியில் மாற்றியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்... மேலும் பார்க்க