செய்திகள் :

முகமது நபி பற்றி அவதூறு பரப்பிய 5 பேருக்கு மரண தண்டனை!

post image

இஸ்லாமிய இறைத்தூதரான முகமது நபி பற்றி இணையத்தில் அவதூறு பரப்பிய 5 பேருக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பாகிஸ்தானில் கடவுளை நிந்தனை செய்வது மிகப்பெரிய குற்றமாகப் பார்க்கப்படுகிறது. சில நேரங்களில் இதுதொடர்பான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூட பெரிய பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

பாகிஸ்தானில் உள்ள தனியார் அமைப்புகள் இணையத்தில் இஸ்லாம் குறித்து அவதூறு பரப்பும் இளைஞர்கள் மீது தொடர்ந்து புகாரளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தனியார் அமைப்பு அளித்தப் புகாரின் பேரில் இணையத்தில் இறைத்தூதர் முகமது நபி பற்றி அவதூறாகப் பதிவிட்ட 5 பேருக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தானின் ராவல்பிண்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனித்தனியே அனைவருக்கும் ஆயுள் தண்டனையும், மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக கூடுதலாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளன.

ஐந்து பேரில் ஒருவர் மட்டும் ஆப்கனைச் சேர்ந்தவர்.

இவர்கள் மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டபோதும் பாகிஸ்தான் அரசு இதுவரை யாருக்கும் தண்டனையை நிறைவேற்றவில்லை.

மேலும், இதுபோன்று நூற்றூக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இதுதொடர்பான வழக்குகளில் கடந்த அக்டோபர் மாதம் வரை 767 பேர் சிறையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க | உலகின் மூன்றாவது பொருளாதாரமாக இந்தியா! சர்வதேச நிதி நாணயம் தகவல்

சர்வதேச மாணவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் அமெரிக்கா! காரணம் என்ன?

அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாட்டை விட்டு தாமாக வெளியேறுமாறு அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான ஆய்வின்படி, அமெரிக்காவில் கல்வி விசா... மேலும் பார்க்க

எக்ஸ் தளம் மீண்டும் விற்பனையானது!

எக்ஸ் தளம் மீண்டும் கைமாற்றப்பட்டுள்ளது. ஆனால், இம்முறையும் அதன் உரிமையாளராக எலான் மஸ்க் என்பதுதான் சுவாரசியமே!எக்ஸ் தளத்தைப் பயன்படுத்துவோர், அதில் கணக்கு வைத்திருப்போர் எண்ணிக்கை 60 கோடிக்கும் மேல்.... மேலும் பார்க்க

ஆபரேஷன் பிரம்மா: மியான்மர் அதிகாரிகளிடம் நிவாரணப் பொருள்கள் ஒப்படைப்பு!

புது தில்லி: ஆபரேசன் பிரம்மா பெயரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.மியான்மரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள மிக ச... மேலும் பார்க்க

நிலைக்குலுங்கிய மியான்மர்: ஆயிரத்தைத் தாண்டிய பலி!

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரதைத் தாண்டியுள்ளதாக அந்த நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் நேற்று(28.03.25) பிற்பகல் ச... மேலும் பார்க்க

மியான்மரில் ஒரே நாளில் 15 முறை நிலநடுக்கம்! என்ன காரணம்?

மியான்மரில்(பர்மா) ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள மிக சக்திவாய்ந்த நிலடுக்கம் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்டது. மியான்மா் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை ப... மேலும் பார்க்க

டைம் டிராவல் செய்ய ஆசையா? கூகுளின் புதிய அம்சம்!

கூகுள் மேப்பில் டைம் டிராவல் செய்யும்வகையில் புதிய அம்சத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த நூற்றாண்டில் உலகம் எவ்வாறு இருந்தது என்று தற்போதைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால், ... மேலும் பார்க்க