செய்திகள் :

ரஹானேவின் கோரிக்கையை நிராகரித்த ஈடன் கார்டன் பிட்ச் மேற்பார்வையாளர்!

post image

பிட்சை மாற்றும்படி கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானேவின் கோரிக்கையை ஈடன் கார்டன் திடலின் பிட்ச் மேற்பார்வையாளர் நிராகரித்துள்ளார்.

நடப்பு சாம்பியன் கேகேஆர் தனது முதல் போட்டியிலேயே ஆர்சிபியுடன் தோல்வியுற்றது அதன் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

36 வயதாகும் ரஹானே அடுத்து வரும் ஐபிஎல் போட்டிகளில் தங்களது அணிக்கு ஏற்றவாரு ஈடன் கார்டன் திடலின் பிட்சினை மாற்றும்படி கூறியுள்ளார்.

70 வயதாகும் ஈடன் கார்டன் திடலின் பிட்ச் மேற்பார்வையாளர் சுஜன் முகர்ஜி கூறியதாவது:

ஈடன் கார்டன் பிட்ச்சை மாற்ற முடியாது

நான் இங்கிருக்கும்வரை ஈடன் கார்டன் பிட்ச் மாறாது. ஐபிஎல் விதிகளின்படி ஒரு அணி அதன் பிட்ச்சினை மாற்றும்படி கூறக்கூடாது.

நான் பொறுப்பேற்றதில் இருந்து பிட்ச் இப்படித்தான் இருக்கிறது. கடந்த காலங்களில் பிட்ச் இப்படித்தான் இருந்தது. இப்போது எதுவும் மாறவில்லை. வருங்காலத்திலும் பிட்ச் மாறப்போவதில்லை.

ஆர்சிபி சுழல் பந்துவீச்சாளர்கள் 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். கேகேஆர் சுழல் பந்துவீச்சாளர்கள் எத்தனை எடுத்தார்கள்? க்ருணால் பாண்டிய 3 விக்கெட்டுகள் எடுத்தார். சுயாஷ் சர்மா பந்தினை திருப்பி ரஸ்ஸலின் விக்கெட்டை வீழ்த்தினார் என்றார்.

கடந்த முறை சாம்பியன் வென்ற கேகேஆர் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் தங்களது அணிக்கு சொந்த மண் சாதகம் இல்லையெனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிட்ச் மேற்பார்வையாளரின் கருத்தினால் கேகேஆர் அணி அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய போட்டியில் சுனில் நரைனுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவருக்குப் பதிலாக இங்கிலாந்தின் முன்னாள் ஆல்-ரவுண்டர் மொயின் அலி விளையாடுகிறார்.

சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவுக்கு சாதகமான சூழல் இல்லையா? புஜாராவுக்கு அதிர்ச்சியளித்த ஃபிளெமிங்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் புஜாரா பேசியுள்ளார்.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற நேற்றை... மேலும் பார்க்க

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக மும்பை பந்துவீச்சு; முதல் வெற்றி கிடைக்குமா?

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெறும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ... மேலும் பார்க்க

அதிரடியாக விளையாட எங்களிடம் வீரர்கள் இருக்கிறார்கள், தப்பு கணக்கு வேண்டாம்: சிஎஸ்கே பயிற்சியாளர்

அதிரடியாக விளையாட சென்னை சூப்பர் கிங்ஸில் வீரர்கள் இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப... மேலும் பார்க்க

அணியில் இணைந்த ஹார்திக் பாண்டியா; முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா மும்பை இந்தியன்ஸ்?

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடாத ஹார்திக் பாண்டியா, குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியில் விளையாடவுள்ளார்.18-வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்த... மேலும் பார்க்க

தோனி முன்னதாக களமிறங்க வேண்டும்: வாட்சன் பேட்டி

நேற்றிரவு சேப்பாக்கில் நடந்த போட்டியில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கே அணி ஆர்சிபியிடம் தோல்வியைச் சந்தித்தது.முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 196/7 ரன்கள் எடுக்க அடுத்து விளையாடிய சிஎஸ்கே 20 ஓவர்களில்... மேலும் பார்க்க

ஐபிஎல் போட்டி அட்டவணையில் திடீர் மாற்றம்!

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் திடலில் ஏப். 6-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம், ஏப். 8-ஆம்... மேலும் பார்க்க