செய்திகள் :

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8 வயது சிறுமி; போக்சோ வழக்கில் 70 வயது முதியவர் கைது!

post image

தஞ்சாவூர் வல்லம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அஸ்லம் கான் வயது 70. பள்ளியில் படிக்கின்ற எட்டு வயது சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை அறிந்த அஸ்லம் கான் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியிடம் ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக கூறி பேசியிருக்கிறார். இதைத்தொடர்ந்து அந்த சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

போக்சோ
போக்சோ

இந்த நிலையில் அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதிருக்கிறார். இதில் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடவே வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் அஸ்லம் கானை பிடித்து விசாரணை மேற்கொண்டனர் போலீஸார். இதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அஸ்லம் கான் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைதுசெய்த போலீஸார், புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

உசிலம்பட்டி போலீஸ் கொலை வழக்கு: கேரளா தப்ப முயன்ற ரௌடி சுட்டுப் பிடித்த போலீஸார் - நடந்தது என்ன?

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் தலைமைக் காவலர் முத்துக்குமார் (40). இவர் கடந்த 2009-ல் காவல்துறையில் பணிக்கு சேர்ந்து, தற்போது உசிலம்பட்டி காவல் ஆய்வாளருக்கு டிரைவராக பணிய... மேலும் பார்க்க

பிரபல ரௌடி அசோக்கைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்.. செங்கல்பட்டு வனப்பகுதியில் நடந்ததென்ன?

செங்கல்பட்டு அருகே உள்ள திருப்போரூர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் (30). இவர் ஏ பிளஸ் ரௌடி. சிறையிலிருந்து வெளியில் வந்த அசோக்கை போலீஸார் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அசோக் தலைமையிலான ரௌடி டீம், தி.மு... மேலும் பார்க்க

சென்னை: மருத்துவ மாணவிக்குப் பாலியல் தொல்லை - மாணவனைத் தேடும் போலீஸ்!

சென்னையில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் எம்.டி.எஸ் 2-ம் ஆண்டு படித்து வருகிறார் 26 வயது மாணவி ஒருவர். இவர் கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், அதே கல்லூரியில் படி... மேலும் பார்க்க

திண்டுக்கல்: நிலத்தகராறில் 3 பேர் கொலையா? கிணற்றில் உடல்களைத் தேடிய போலீஸார்; நடந்தது என்ன?

திண்டுக்கல் அருகே அணைப்பட்டியில் இருதரப்புக்கும் இடையில் நிலப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.இதில் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களின் உடல்கள் அணைப்பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் வீச... மேலும் பார்க்க

சைபர் கிரிமினல்களிடம் ரூ.50 லட்சத்தை இழந்த வயதான தம்பதி தற்கொலை

இணையத்தளக் குற்றவாளிகள் பெண்கள் மற்றும் முதியவர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடம் இருக்கும் பணத்தைப் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன. அதிகமானோர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ள... மேலும் பார்க்க

கிரிக்கெட்டர் முதல் ஐடி ஊழியர் வரை - உயர் ரக போதை பொருளால் கோவையை கலங்கடித்த நெட்வொர்க்!

கோவை மாவட்டத்தில் உயர் ரக போதை பொருள்கள் அதிகளவு பயன்படுத்துவதாக புகார் உள்ளது. இந்நலையில் ஆர்.எஸ்.புரம் சுற்று வட்டார பகுதிகளில் உயர் ரக போதை பொருள்கள் விற்பனை செய்யும் ஒரு நெட்வொர்க் குறித்து காவல்த... மேலும் பார்க்க