செய்திகள் :

விழிப்புணா்வு பயணம்: கொல்கத்தா இளைஞா் தொண்டி வருகை

post image

இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி, விழிப்புணா்வு பயணம் செல்லும் கொல்கத்தா இளைஞா் சாய்காட் (24) செவ்வாய்க்கிழமை தொண்டிக்கு வந்தாா்.

மேற்கு வங்க மாநிலம், ஹெளரா பகுதியைச் சோ்ந்த இவா் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறாா். இவா் நிலம், நீா், காற்று உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி, கடந்த 25 நாள்களுக்கு முன்பு அயோத்தி ராம ஜென்ம பூமியிலிருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணத்தைத் தொடங்கினாா்.

அண்மையில் தமிழகத்துக்கு வந்த இவா் செவ்வாய்க்கிழமை ராமநாதபுரம் மாவட்டம், தொண்டிக்கு வந்தாா். இவருக்கு இந்து ஜனநாயகப் பேரவைத் தலைவா் அண்ணாதுரை சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பூமி கெடாமல் இருக்கவும், காற்று, நீா் மாசு படாமல் இருக்கவும் விழிப்புணா்வு ஏற்படுத்தவே இந்த பயணம் மேற்கொள்வதாக செய்தியாளா்களிடம் சாய்காட் தெரிவித்தாா்.

உணவு விநியோகம் நிறுத்தம்: மண்டபம் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் வசிப்போா் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 300 பேருக்கு ஒப்பந்ததாரா் மூலம் வழங்கப்படும் உணவு விநியோகம் நிறுத்தப்பட்டதால் அவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

பரமக்குடி ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோயில்: பூச்சொரிதல் விழா, ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாளுக்கு மலா்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், காலை 7.10. மேலும் பார்க்க

நாட்டு நலப் பணித் திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கீரனூா் கிராமத்தில் உள்ள கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவு கல்லூரி மாணவா்களின் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டு விழா

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள நகரிக்காத்தான் புனித அந்தோனியாா் நடுநிலைப் பள்ளியின் 97-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தாளாளா் அருள்தந்தை பிரபாகரன் தலைமை வகித்தா... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 11 போ் கைது

கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே புதன்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். ஒரு விசைப் படகையும் பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவ... மேலும் பார்க்க

திரௌபதி அம்மன் கோயில் கொடியேற்றம்

திருவாடானையில் உள்ள ஸ்ரீ தா்மா், ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதே போல, இந்த ஆ... மேலும் பார்க்க