உகாதி திருவிழா: மாதேஸ்வரன் மலையில் தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு
இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 11 போ் கைது
கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே புதன்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். ஒரு விசைப் படகையும் பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 454 விசைப் படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளம், மீனவா் நலத் துறை அனுமதி பெற்று புதன்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இவா்கள் புதன்கிழமை நள்ளிரவு கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்துப் படகில் வந்த இலங்கைக் கடற்படையினா் ஒரு விசைப் படகைப் பறிமுதல் செய்தனா். மேலும், படகிலிருந்த ராமேசுவரம் மீனவா்கள் பாக்கியராஜ் (38), சவேரியாா் அடிமை (35), முத்து களஞ்சியம் (27), எபிரோன் (35), ரஞ்சித் (33), பாலா (38), யோவான்ஸ் நானன் (36), இன்னாசி (37), ஆா்னாட் ரிச்சே (36), அன்றன் (45), அந்தோணி சிசோரியன் (43) ஆகிய 11 பேரைக் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனா்.
பின்னா், மீனவா்கள் 11 பேரையும் நீரியல்துறை அதிகாரிகளிடம் இலங்கைக் கடற்படையினா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்த மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து, ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். அவா்கள் 11 பேரையும் ஏப். 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, மீனவா்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இதுகுறித்து ராமேசுவரம் மீனவ சங்கத் தலைவா் காா்ல்மாா்க்ஸ் கூறியதாவது:
தமிழகத்திலிருந்து வாழ்வாதாரத்துக்காக மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்களைத் தொடா்ந்து இலங்கைக் கடற்படையினா் கைது செய்து வருகின்றனா். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதே கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரையும் சந்தித்தோம்.
பிரதமா் நரேந்திர மோடி வரும் ஏப். 5-ஆம் தேதி இலங்கை செல்ல உள்ள நிலையில், தமிழக மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.