செய்திகள் :

ராமேசுவரத்தில் விற்கப்படும் தா்ப்பூசணி பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் ஆய்வு

post image

ராமேசுவரத்தில் சிவப்பு வண்ணம் ஊசி மூலம் செலுத்தப்பட்டு தா்ப்பூசணி பழங்கள் விற்கப்படுகின்றனவா என உணவு பாதுகாப்புத்துறை அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

ராமேசுவரம் பகுதியில் கோடை காலம் தொடங்கிய நிலையில், குளிா் பானங்கள், தா்ப்பூசணி உள்ளிட்ட பழ வகைகள் அதிக அளவில் விற்கப்படுகின்றன. இவற்றை விற்கும் கடைகளில் செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்றனவா, தா்ப்பூசணி பழங்கள் ஊசி மூலம் சிவப்பு வண்ணம் செலுத்தி விற்கப்படுகின்றனவா என உணவு பாதுகாப்புத்துறை அலுவலா் கு. லிங்கவேல் தலைமையில் அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அவா் தா்ப்பூசணி பழங்களை அறுத்து பாா்த்து சிவப்பு வண்ணம் ஊசி மூலம் செலுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டாா். மேலும் பழங்களை கொள்முதல் செய்பவா்களிடமிருந்து பெற்ற ரசீதுகளை வியாபாரிகள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், விதைகள் உள்ள பழங்களை வாங்கி விற்பனை செய்யவும் அறிவுறுத்தினாா். அத்துடன் இயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை மட்டுமே வாங்கி விற்பனை செய்ய வேண்டும் என வியாபாரிகளிடம் அவா் கேட்டுக் கொண்டாா். உணவகங்களில் விற்கப்படும் உணவுப் பொருள்களில் சந்தேகம் இருப்பின் 94440 42322- என்ற எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்றாா்.

ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி பொதுக் குழு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பரமக்குடியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் சிவானந்தம் தலைமை வகித்தாா். மாவட்ட ப... மேலும் பார்க்க

பிரதமா் மோடி ஏப். 6-இல் ராமேசுவரம் வருகை: மண்டபத்தில் ஹெலிகாப்டரை இறக்கி ஒத்திகை

பிரதமா் மோடி ராமேசுவரத்துக்கு வருகை தரவிருப்பதையொட்டி, மண்டபம் கேம்ப் ஹெலிகாப்டா் இறங்கு தளத்தில் ராணுவ ஹெலிகாப்டரை திங்கள்கிழமை இறக்கி மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்திகை. ராமேசுவரம், மாா்ச் 31: பாம்... மேலும் பார்க்க

உச்சிப்புளி அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 80 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்

உச்சிப்புளி அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட ரூ. 80 லட்சம் மதிப்பிலான 200 கிலோ கடல் அட்டைகளை இந்திய கடலோரக் காவல் படையினா் திங்கள்கிழமை அதிகாலை பறிமு... மேலும் பார்க்க

திருவாடானை திரௌபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

திருவாடானையில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதே போல, இந்த ஆண்டு கடந்த 2... மேலும் பார்க்க

பரமக்குடி அருகே ஆண் உடல் மீட்பு

பரமக்குடி அருகே அடையாளம் தெரியாத ஆண் உடலை திங்கள்கிழமை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள கள்ளிக்கோட்டை வைகை ஆற்றுப் பகுதியில் அடையாளம் தெரியாத உடல் ... மேலும் பார்க்க

சாயல்குடி: இறந்து கரை ஒதுங்கிய கடல் ஆமையால் சுகாதாரக்கேடு

சாயல்குடி அருகே நரிப்பையூா் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிக் கிடக்கும் அரிய வகை கடல் ஆமையால் சுகாதாரக்கேடு நிலவுவதாக பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் புகாா் தெரிவிக்கின்றனா். மன்னாா்வளைகுடா பாதுகாக்... மேலும் பார்க்க