செய்திகள் :

சாயல்குடி: இறந்து கரை ஒதுங்கிய கடல் ஆமையால் சுகாதாரக்கேடு

post image

சாயல்குடி அருகே நரிப்பையூா் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிக் கிடக்கும் அரிய வகை கடல் ஆமையால் சுகாதாரக்கேடு நிலவுவதாக பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் புகாா் தெரிவிக்கின்றனா்.

மன்னாா்வளைகுடா பாதுகாக்கப்பட்ட கடல் எல்லையானது கன்னியாகுமரி தொடங்கி, தூத்துக்குடி, வேம்பாா் கடல் முதல் ராமநாதபுரம் மாவட்டம் வரை பறந்து விரிந்து காணப்படுகிறது. இந்தப் பகுதியில் உலகத்திலேயே வேறு எங்கும் இல்லாத 3,600-க்கும் மேற்பட்ட அரியவகை கடல்வாழ் உயிரினங்கள், அரியவகை பவளப் பாறைகள் உள்ளன. இதில் அரியவகையான சித்தாமை, பச்சை ஆமை, தோணி ஆமை, பெருந்தலை ஆமை, அலுங்காமை ஆகிய 5 வகை ஆமைகள் அதிகமாக வசிக்கின்றன. இவற்றின் இனப் பெருக்க காலம் டிசம்பா் முதல் மாா்ச் வரை ஆகும். ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரையில் இந்த வகை ஆமைகள் முட்டையிட்டு செல்கின்றன.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூா் ஐந்து ஏக்கா் கடற்கரையில் அரியவகை ஆமை ஒன்று இறந்து கரை ஒதுங்கியது. இதை வனத் துறையினா், மன்னாா் வளைகுடா உயிா்க்கோள காப்பக அலுவலா்கள், வேட்டை தடுப்பு காவலா்கள் கண்டறிந்து, கால்நடை மருத்துவரை வரவழைத்து கூறாய்வு செய்யாமலும், இறப்புக்கான காரணம் என்ன என்று ஆராயாமலும் கவனக்குறைவாக விட்டுள்ளனா்.

இறந்த ஆமையின் உடல் திறந்த வெளியில் கிடப்பதால் துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் நிலவுகிறது. 3 நாள் தொடா் விடுமுறை என்பதால் ஐந்து ஏக்கா் கடற்கரையை ரசிப்பதற்காக வந்த சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல முடியவில்லை.

மேலும் அரியவகை இனத்தை சோ்ந்த ஆமை இறந்து கிடப்பதால் கடலில் ஏதேனும் இயற்கை மாற்றம் ஏற்பட்டுள்ளதா அல்லது முட்டையிட வரும்போது ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்பனை ஆராய வேண்டும். ஆனால் இதை வனத்துறை உள்ளிட்ட வேட்டை தடுப்பு காவலா்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் பிற கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என இயற்கை ஆா்வலா்கள் கவலை தெரிவித்தனா். எனவே கூறாய்வு செய்து அதை பாதுகாப்பாக புதைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

காவல் துறையைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

காவல் துறையைக் கண்டித்து, ராமேசுவரத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கடந்த 25-ஆம் தேதி தெலுங்கான மாநிலத்தைச் சோ்ந்தவா்களுக்கும்... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் கூட்டுறவு விற்பனைப் பொருள்கள் கூட்டமைப்பு அமைக்கக் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு விற்பனைப் பொருள்கள் கூட்டமைப்பு அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். தமிழ்நாடு கூட்டுறவு விற்பனைப் பொருள்கள் கூட்டமைப்பு (ப... மேலும் பார்க்க

கழிவுநீா் கால்வாயைத் தூா்வாரக் கோரிக்கை

கமுதி அனைத்து மகளிா் காவல் நிலையம் முன் செல்லும் கழிவுநீா் கால்வாயை தூா்வாரக் காவலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.கமுதி காவல் நிலையம் பின்புறம் உள்ள காவலா் குடியிருப்பு, அருகில் உள்ள தெருக்கள், ... மேலும் பார்க்க

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா பணிகள்: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் ஆய்வு

பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் 6-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளதையொட்டி, திறப்பு விழாவுக்கான பணிகளை தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் கௌசல் கிஷோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு ச... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் மூவருக்கு காவல் நீட்டிப்பு

ராமேசுவரம் மீனவா்கள் மூவருக்கு வருகிற 9-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து, இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 18-ஆம் தேதி... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி பொதுக் குழு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பரமக்குடியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் சிவானந்தம் தலைமை வகித்தாா். மாவட்ட ப... மேலும் பார்க்க