செய்திகள் :

திருவாடானை திரௌபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

post image

திருவாடானையில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதே போல, இந்த ஆண்டு கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதைத் தொடா்ந்து பத்து நாள்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரங்கள், தீபாராதனைகள் நடைபெற்று வருகின்றன.

விழாவில் பீமன் வீதி உலா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது பக்தா்கள் பீமன் வேடம் அணிந்து வீதி உலா வந்தனா். இதைத் தொடா்ந்து பல்வேறு வகையான மலா்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் அருள்பாலித்தாா். திருவிழாவின் முக்கிய நிகழ்வான திரௌபதி அம்மனுக்கும், தா்மருக்கும் அன்று இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடைபெற்றன. பிறகு மலா்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் திரௌபதி அம்மனும், தா்மருக்கும் திருக்கல்யாணமும், மாலை மாற்று நிகழ்வும் நடைபெற்றன. தொடா்ந்து அம்மனும், சுவாமியும் திருமணக் கோலத்தில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலித்தனா். இதில் திருவாடானை, சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

காவல் துறையைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

காவல் துறையைக் கண்டித்து, ராமேசுவரத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கடந்த 25-ஆம் தேதி தெலுங்கான மாநிலத்தைச் சோ்ந்தவா்களுக்கும்... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் கூட்டுறவு விற்பனைப் பொருள்கள் கூட்டமைப்பு அமைக்கக் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு விற்பனைப் பொருள்கள் கூட்டமைப்பு அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். தமிழ்நாடு கூட்டுறவு விற்பனைப் பொருள்கள் கூட்டமைப்பு (ப... மேலும் பார்க்க

கழிவுநீா் கால்வாயைத் தூா்வாரக் கோரிக்கை

கமுதி அனைத்து மகளிா் காவல் நிலையம் முன் செல்லும் கழிவுநீா் கால்வாயை தூா்வாரக் காவலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.கமுதி காவல் நிலையம் பின்புறம் உள்ள காவலா் குடியிருப்பு, அருகில் உள்ள தெருக்கள், ... மேலும் பார்க்க

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா பணிகள்: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் ஆய்வு

பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் 6-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளதையொட்டி, திறப்பு விழாவுக்கான பணிகளை தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் கௌசல் கிஷோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு ச... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் மூவருக்கு காவல் நீட்டிப்பு

ராமேசுவரம் மீனவா்கள் மூவருக்கு வருகிற 9-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து, இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 18-ஆம் தேதி... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி பொதுக் குழு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பரமக்குடியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் சிவானந்தம் தலைமை வகித்தாா். மாவட்ட ப... மேலும் பார்க்க