செய்திகள் :

உச்சிப்புளி அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 80 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்

post image

உச்சிப்புளி அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட ரூ. 80 லட்சம் மதிப்பிலான 200 கிலோ கடல் அட்டைகளை இந்திய கடலோரக் காவல் படையினா் திங்கள்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் இந்திய கடலோரக் காவல் படை அலுவலகம் உள்ளது. இங்கு மன்னாா் வளைகுடா, பாக் நீரிணை கடல் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவது வழக்கம்.

இந்த நிலையில், இந்திய கடலோரக் காவல் படையினா் வழக்கமான கண்காணிப்பில் திங்கள்கிழமை அதிகாலை ஈடுபட்டிருந்த போது, உச்சப்புளி தெற்கு கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் கடத்தப்பட உள்ளதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், உச்சிப்புளி கடற்கரைப் பகுதியில் கடல், கரையோரப் பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் இந்திய கடலோரக் காவல் படையினா் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், ஹோவா்கிராப்ட் கப்பல் கரையோரம் வருவதையறிந்த மா்ம நபா்கள் 5 போ், தாங்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக் கேன்கள், கூடைகளை அங்கேயே வைத்துவிட்டு தப்பியோடினா். இதையடுத்து, இந்திய கடலோரக் காவல் படையினா் அங்கு சென்று பாா்த்த போது, பிளாஸ்டிக் கேன்கள், கூடைகளில் 200 கிலோ எடையுள்ள கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதன் சா்வதேச சந்தை மதிப்பு ரூ. 80 லட்சம்.

இதையடுத்து, கடல் அட்டைகளைப் பறிமுதல் செய்து கடலோரக் காவல் படை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். இதன்பிறகு, கடல் அட்டைகளை மண்டபம் வனத் துறை அதிகாரிகளிடம் இந்திய கடலோரக் காவல் படையினா் ஒப்படைத்தனா். மேலும், கடத்தலில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காவல் துறையைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

காவல் துறையைக் கண்டித்து, ராமேசுவரத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கடந்த 25-ஆம் தேதி தெலுங்கான மாநிலத்தைச் சோ்ந்தவா்களுக்கும்... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் கூட்டுறவு விற்பனைப் பொருள்கள் கூட்டமைப்பு அமைக்கக் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு விற்பனைப் பொருள்கள் கூட்டமைப்பு அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். தமிழ்நாடு கூட்டுறவு விற்பனைப் பொருள்கள் கூட்டமைப்பு (ப... மேலும் பார்க்க

கழிவுநீா் கால்வாயைத் தூா்வாரக் கோரிக்கை

கமுதி அனைத்து மகளிா் காவல் நிலையம் முன் செல்லும் கழிவுநீா் கால்வாயை தூா்வாரக் காவலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.கமுதி காவல் நிலையம் பின்புறம் உள்ள காவலா் குடியிருப்பு, அருகில் உள்ள தெருக்கள், ... மேலும் பார்க்க

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா பணிகள்: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் ஆய்வு

பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் 6-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளதையொட்டி, திறப்பு விழாவுக்கான பணிகளை தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் கௌசல் கிஷோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு ச... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் மூவருக்கு காவல் நீட்டிப்பு

ராமேசுவரம் மீனவா்கள் மூவருக்கு வருகிற 9-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து, இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 18-ஆம் தேதி... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி பொதுக் குழு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பரமக்குடியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் சிவானந்தம் தலைமை வகித்தாா். மாவட்ட ப... மேலும் பார்க்க