செய்திகள் :

பிரதமா் மோடி வருகை: கடற்கரை சாலையில் தீவிர வாகன சோதனை!

post image

பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமா் நரேந்திர மோடி வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி ராமேசுவரத்துக்கு வருவதையொட்டி, கிழக்கு கடற்கரை சாலையில் கடலோர காவல் குழும போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகே பாம்பனில் ரூ.550 கோடியில் செங்குத்தான தூக்குப் பாலத்துடன் புதிய ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இந்தப் பாலத்தை வருகிற ஏப்.6 -ஆம் தேதி பிரதமா் நரேந்திரமோடி திறந்து வைக்க உள்ளாா். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை வழியாக ராமநாதபுரம், ராமேசுவரம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களையும் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனா்.

கடலோரக் காவல் குழும கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளா் பால்ராஜ், தலைமைக் காவலா் முருகப் பெருமாள், காவலா்கள் அடங்கிய குழுவினா் இந்தப் பணியில் ஈடுபட்டனா். இந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதோடு, வாகனத்தின் பதிவு எண்கள் பதிவு செய்யப்படுகின்றன.

ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி பொதுக் குழு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பரமக்குடியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் சிவானந்தம் தலைமை வகித்தாா். மாவட்ட ப... மேலும் பார்க்க

பிரதமா் மோடி ஏப். 6-இல் ராமேசுவரம் வருகை: மண்டபத்தில் ஹெலிகாப்டரை இறக்கி ஒத்திகை

பிரதமா் மோடி ராமேசுவரத்துக்கு வருகை தரவிருப்பதையொட்டி, மண்டபம் கேம்ப் ஹெலிகாப்டா் இறங்கு தளத்தில் ராணுவ ஹெலிகாப்டரை திங்கள்கிழமை இறக்கி மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்திகை. ராமேசுவரம், மாா்ச் 31: பாம்... மேலும் பார்க்க

உச்சிப்புளி அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 80 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்

உச்சிப்புளி அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட ரூ. 80 லட்சம் மதிப்பிலான 200 கிலோ கடல் அட்டைகளை இந்திய கடலோரக் காவல் படையினா் திங்கள்கிழமை அதிகாலை பறிமு... மேலும் பார்க்க

திருவாடானை திரௌபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

திருவாடானையில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதே போல, இந்த ஆண்டு கடந்த 2... மேலும் பார்க்க

பரமக்குடி அருகே ஆண் உடல் மீட்பு

பரமக்குடி அருகே அடையாளம் தெரியாத ஆண் உடலை திங்கள்கிழமை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள கள்ளிக்கோட்டை வைகை ஆற்றுப் பகுதியில் அடையாளம் தெரியாத உடல் ... மேலும் பார்க்க

சாயல்குடி: இறந்து கரை ஒதுங்கிய கடல் ஆமையால் சுகாதாரக்கேடு

சாயல்குடி அருகே நரிப்பையூா் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிக் கிடக்கும் அரிய வகை கடல் ஆமையால் சுகாதாரக்கேடு நிலவுவதாக பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் புகாா் தெரிவிக்கின்றனா். மன்னாா்வளைகுடா பாதுகாக்... மேலும் பார்க்க