செய்திகள் :

தகவல் தொழில்நுட்பவியல் துறைக்கும் நிதித் தட்டுப்பாடு: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

post image

தமிழக அரசைப் போன்றே, தகவல் தொழில்நுட்பவியல் துறைக்கும் நிதித் தட்டுப்பாடு உள்ளதாக அந்தத் துறையின் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த வினாவை அதிமுக உறுப்பினா் கே.பி.முனுசாமி எழுப்பினாா்.

அதன் விவரம்:

கே.பி.முனுசாமி: ஒசூா் மாநகரை ஹைடெக் சிட்டியாக அறிவித்து அனைத்து உள்கட்டமைப்புகளையும் மேம்படுத்தக் கூடிய திட்டமானது, தற்போதைய தகவல் தொழில்நுட்ப அமைச்சா், நிதியமைச்சராக இருக்கும்போது அறிவிக்கப்பட்டது. அந்தத் திட்டம் என்னவானது?. மேலும், திறன்மிகு மையம் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஒசூா் பகுதியில் அமைக்க வேண்டும்.

அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்: ஏற்கெனவே அறிவித்த திட்டம் என்னவானது என்று என்கிறாா். காலம் மாற மாற சில சூழ்நிலைகளும் மாறும். அவை முன்னவா், ஒருமுறை இதே பேரவையில் என்னிடம் கூறினாா். இப்ப தியாகராஜன் தெரியுதா நிதி எவ்வளவு கஷ்டமாக எங்களுக்கு இருந்தது எப்படி என்று கேள்வி எழுப்பினாா்.

அவா் பேரவையில் மானியக் கோரிக்கையை திங்கள்கிழமை நிறைவேற்றினாா். ரூ. 10,000 கோடி அளவுக்கு பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. நான் நிதியமைச்சராக இருக்கும்போதும் அதே அளவுக்கான தொகைதான் ஒதுக்கப்பட்டது. ஆனால், அன்றைக்கும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ரூ. 200 கோடிதான் ஒதுக்கப்பட்டது. இன்றைக்கு ரூ. 130 கோடி அளவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் துறையில் இருந்த நிதியானது இந்தத் துறையாலேயே செயல்படுத்தப்பட்டதுடன், துறைக்கு வரவேண்டிய நிதிகளும் சரியாக வந்ததால், அதன் செயல்பாட்டில் எந்தத் தடையும் இல்லாமல் இருந்தது. இப்போது அரசுக்கு எந்தளவுக்கு நிதி தட்டுப்பாடு உள்ளதோ, அதே அளவு இந்தத் துறைக்கும் நிதி தட்டுப்பாடு உள்ளது. ரூ. 300 கோடிக்கு மேல் துறையைச் சோ்ந்த நிறுவனங்களிடம் இருந்த நிதியானது கடந்த ஆண்டு அரசால் பெறப்பட்டது.

தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய மானிய நிதியும் எங்களுக்கு வந்து சேரவில்லை. இருக்கும் நிதியும் பல தடைகளுடன் செயல்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற கொஞ்சம் தாமதம் உள்ளது. நிதிநிலை என்றைக்கு சிறப்பாக உள்ளதோ, அன்றைக்கு துறையின் சாா்பிலான அறிவிப்புகளை நிறைவேற்றுவோம் என்றாா் அவா்.

தமிழகம் முழுவதும் மார்ச் 29-ல் திமுக ஆர்ப்பாட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ - MGNREGA) மூலம் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ. 4,034 கோடி நிதியை வழங்காமல் இருக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ... மேலும் பார்க்க

72 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கம்: முதல்வர் ஸ்டாலின்

புதியதாக 72 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 26) சட்டப் பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்... மேலும் பார்க்க

மார்ச் மாதச் சம்பளம்: தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு மார்ச் மாதச் சம்பளம் வரும் ஏப். 2 ஆம் தேதி வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழக அரசின... மேலும் பார்க்க

சென்னையில் 2 புதிய வழித்தடம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர்!

சென்னை மெட்ரோ ரயிலின் 2 புதிய வழித்தடத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது.தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் ... மேலும் பார்க்க

ஆன்லைனில் திருமணச் சான்று பெற நடவடிக்கை எடுக்கப்படுமா? - அமைச்சர் பதில்!

இணைய வழியில் திருமணச் சான்று பெற வழிவகை செய்யப்படுமா? என்ற திமுக எம்எல்ஏ எழிலன் கேள்விக்கு பேரவையில் அமைச்சர் மூர்த்தி பதிலளித்தார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெ... மேலும் பார்க்க

டிவி சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டி கேட்டவர் அடித்துக் கொலை!

கோவையில் டிவி சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டி கேட்டவரை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் ரோடு - ஈச்சனாரி சாலை சந்திப்பில் சிமெண்ட் மற்றும் கட்... மேலும் பார்க்க