செய்திகள் :

ஆன்லைனில் திருமணச் சான்று பெற நடவடிக்கை எடுக்கப்படுமா? - அமைச்சர் பதில்!

post image

இணைய வழியில் திருமணச் சான்று பெற வழிவகை செய்யப்படுமா? என்ற திமுக எம்எல்ஏ எழிலன் கேள்விக்கு பேரவையில் அமைச்சர் மூர்த்தி பதிலளித்தார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இன்று கேள்வி நேரத்தின்போது சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ எழிலன், "தமிழ்நாட்டில் சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெறுவதில் சார்பதிவாளர் அலுவலங்களிலே சில தடைகள் இருக்கின்றன. குறிப்பாக பட்டியலினத்தவர் சுயமரியாதை திருமணம் செய்துகொள்ளும்போது பல தடைகள் ஏற்படுகின்றன.

மேலும் இணைய வழியில் திருமணச் சான்று பெற வழிவகை செய்யப்படுமா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்  பி. மூர்த்தி,

தமிழ்நாட்டில் 2018 முதல் தற்போது வரை 12,114 சுயமரியாதை திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுயமரியாதை திருமணத்தை பதிவு செய்வது குறித்து அனைத்து சார்பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை பயிற்சி நிலையம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

திருமணச் சான்றை பொருத்தவரை, அரசின் இணையதளப் பக்கத்தில் உரிய விவரங்களை நிரப்பி கட்டணம் செலுத்திய பின்னர் விண்ணப்பம் உருவாக்கப்படும். அதன் அச்சுப்பிரதியை எடுத்து திருமணப் பதிவுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

பின்னர் திருமணத்தைப் பதிவு செய்வதற்கான நாள், நேரத்தினை முன்பதிவு செய்வதற்கு டோக்கன் பெற்றுக்கொள்ளலாம்.

பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்கள் திருத்தம் தேவைப்பட்டால் பதிவுத்துறை அலுவலகங்களுக்கு நேரில் வராமல் இணையம் வழியாகவே சரிசெய்து கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.

திருமணச் சான்றுக்கு இணையதளப் பக்கத்தில் விவரங்களை உள்ளீடு செய்து கட்டணம் செலுத்திய பின்னர் நாள், நேரத்திற்கான டோக்கன் பெற்று சரிபார்ப்புக்கு மட்டும் சார்பவதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டும் என்பது தற்போது நடைமுறையில் இருக்கிறது.

இதையும் படிக்க | 'பாஜகவுக்கு ராகுல் காந்தி உதவுகிறார்' - யோகி ஆதித்யநாத்

நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசு அனுமதிப்பதில்லை: பிரியங்கா காந்தி விமர்சனம்

வயநாடு: நாடாளுமன்ற நிகழ்வுகளை ஆளுங்கட்சியே முடக்க நினைக்கிறது என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கடுமையான விமர்சனத்தை சுமத்தியுள்ளார். கேரளத்திலுள்ள தமது சொந்த தொகுதியான வயநாட்ட... மேலும் பார்க்க

திமுக vs தவெக: விஜய்யின் கருத்துக்கு இபிஎஸ் என்ன சொன்னார் தெரியுமா?

பிரதான எதிர்க்கட்சி என்று மக்கள் தங்களை அங்கீகரித்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில்எடப்பாடி பழனிசாமி இன்று(சனிக்கிழமை) செய்தியாளர்களுடன் பேசினார்.... மேலும் பார்க்க

2026-ல் தமிழ்நாடு முதல்வர் யார்? - சிவோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு!

2026-ல் யார் தமிழக முதல்வராக வாய்ப்புள்ளது? என சிவோட்டர் நிறுவனம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.2026 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிக... மேலும் பார்க்க

நீட் தேர்வால் மேலும் ஒரு மாணவி தற்கொலை! திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்!

சென்னையில் நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு, ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி தேவதர்ஷினி, சென்னையில் தனியார் அகாதெமியில் படித்... மேலும் பார்க்க

செங்கோட்டையன் திடீர் தில்லி பயணம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென தில்லி பயணம் மேற்கொண்டுள்ளார். அடுத்தாண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள், கூட்டணி குறித்து ஆலோசித்து வருக... மேலும் பார்க்க

புதிய உச்சத்தில் தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று(சனிக்கிழமை) காலை நிலவர... மேலும் பார்க்க