செய்திகள் :

சத்தீஸ்கரில் 3 நக்ஸல்கள் சுட்டுக் கொலை- பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை

post image

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதிகள் 3 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களில் ஒருவா் ரூ.25 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா் ஆவாா்.

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் மிகுந்த பஸ்தா் பகுதியில் தந்தேவாடா, பிஜாபூா், சுக்மா உள்ளிட்ட 7 மாவட்டங்கள் அமைந்துள்ளன.

தந்தேவாடா, பிஜாபூா் ஆகிய மாவட்டங்களின் எல்லையில் உள்ள வனப் பகுதியில் காவல் துறையின் மாவட்ட ரிசா்வ் படையினா் (டிஆா்ஜி) மற்றும் ‘பஸ்தா் ஃபைட்டா்ஸ்’ படைப் பிரிவினா் இணைந்து நக்ஸல்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அப்போது, நக்ஸல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது.

இதில் நக்ஸல் தீவிரவாதிகள் 3 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன.

கொல்லப்பட்ட நக்ஸல்களில் ஒருவா், தெலங்கானா மாநிலம், வாரங்கல்லைச் சோ்ந்த சுதீா் ஆவாா். பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இவரைக் குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ.25 லட்சம் வெகுமதி அறிவித்து, காவல் துறையினா் தேடி வந்தனா் என்று காவல் கண்காணிப்பாளா் கெளரவ் ராய் தெரிவித்தாா்.

நாட்டில் நக்ஸல் தீவிரவாதத்தை அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் ஒழிக்கும் இலக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அதன்படி, நக்ஸல் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

சத்தீஸ்கரில் நிகழாண்டு இதுவரை 116 நக்ஸல் தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். பஸ்தா் பகுதியில் மட்டும் 100 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்.

பிஜாபூா், கான்கா் ஆகிய மாவட்டங்களில் கடந்த மாா்ச் 20-ஆம் தேதி பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 30 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளம்: வன விலங்குகள் தாக்குதலில் 344 பேர் பலி!

கேரளத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் வன விலங்குகள் தாக்குதலில் 344 பேர் பலியானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வனத் துறை மற்றும் சுற்... மேலும் பார்க்க

வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்கும் இந்தியா!

வெளிநாடுகளில் இந்திய நிறுவனங்களின் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது.வெளிநாடுகளில் பெரிய ஒப்பந்தங்கள் மற்றும் நிலையான முதலீடுகள் காரணமாக, வெளிநாடுகளுக்கு இந்திய நிறுவனங்கள் ... மேலும் பார்க்க

குஜராத்: மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் அரசு பள்ளிகள் மூடல்!

குஜராத்தில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் கடந்த இரு ஆண்டுகளில் 33 மாவட்டங்களில் உள்ள 54 அரசு தொடக்கப் பள்ளிகளை மூடியிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. அரசு தொடக்கப் பள்ளிகளின் நிலைமை பற்றி குஜராத் சட்ட... மேலும் பார்க்க

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கப் போகும் ஜாக்பாட்! 8-வது ஊதியக் குழுவில் உயரும் சம்பளம்!

மத்திய அரசு அமல்படுத்தவுள்ள 8-வது ஊதியக் குழுவில் அரசு ஊழியர்களுக்கு கணிசமான அளவில் சம்பளம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக நமது நாட்டில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஊதியக்குழ... மேலும் பார்க்க

சம்பலில் மசூதிகளில் ரம்ஜான் தொழுகை நடத்த தடையில்லை, ஆனால்.. !

உத்தரப் பிரதேசத்தின், சம்பலில் பாரம்பரிய தொழுகையை நடத்துவதில் எந்த தடையும் இல்லையென்றாலும், கூடாரங்கள் மற்றும் சாலைகளில் மக்கள் ஒன்றுகூடித் தொழுவதைத் தடை செய்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஷ் சந்... மேலும் பார்க்க

பணக்காரப் பெண்கள் பட்டியலில் நுழைந்த முதல் இந்தியர்!

உலகளவிலான பில்லியனர்களின் பட்டியலை ஹுருன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.ஹுருன் தரவறிக்கையின்படி, எச்சிஎல் டெக்னாலஜியின் தலைவரான ரோஷினி நாடார், உலகளவில் முதல் 10 பணக்காரப் பெண்களின் பட்டியலில் 5 ஆவது இடத்தை... மேலும் பார்க்க