செய்திகள் :

கழுகார்: கொலை வழக்கில் எம்.எல்.ஏ-வின் பி.ஏ? டு ‘நோஸ் கட்’ செய்த டெல்லி மேடம்..!

post image

தலைநகருக்கு அருகேயுள்ள மாவட்டத்தில், முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில், அரசியல் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, இந்தக் கொலை வழக்கில், அந்த மாவட்டத்தின் முக்கியத் தொகுதியின் எம்.எல்.ஏ-வின் உதவியாளரும் அவரது ரத்த உறவும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களாம். இது தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆதாரத்தோடு புகார் கொடுத்தும், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லையாம். குறிப்பாக, எம்.எல்.ஏ-வின் உதவியாளர் பெயரை வழக்கில் சேர்க்காமல் இருக்க, போலீஸார் தரப்பில் ‘இனிப்பு’ பேச்சுவார்த்தையும் கனஜோராக நடக்கிறதாம். ‘இந்த விவகாரத்தை லோக்கல் எதிர்க்கட்சியினர் கையில் எடுக்கத் திட்டமிட்டுள்ளதால், தேர்தல் நெருங்கும் சமயத்தில், ஆளும் தரப்புக்குத்தான் பெரும் பின்னடைவு உருவாகும்’ என்கிறார்கள் லோக்கல் உடன்பிறப்புகள்!

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீலகிரி மாவட்டத்திற்கு விசிட் அடிக்கவிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதனால் அவர் கலந்துகொள்ளும் அரசு விழா, கட்சி நிகழ்ச்சி என இரண்டையுமே மிகப் பிரமாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாகியிருக்கிறது. சட்டமன்றக் கூட்டத்தொடர் நடக்கும் நேரம் என்பதால், டைட் ஷெட்யூல் போடப்பட்டிருக்கிறதாம். இருப்பினும் அவரைச் சந்திக்க, முன்னாள் இன்னாள் மாவட்டப் புள்ளிகளின் தரப்பு கடுமையாக முட்டிமோதி வருகிறார்களாம். ‘இவர்களின் பஞ்சாயத்தைக் கேட்டு முதல்வருக்குத்தான் தலைச்சுற்றல் உண்டாகப்போகிறது’ என்கிறார்கள் உடன்பிறப்புகள். இந்த விவகாரம் உளவுத்துறை மூலமாக மேலிடத்தையும் எட்டியிருப்பதால், புரோகிராமில் மாற்றமும் ஏற்பட வாய்ப்பிருக்கிறதாம்!

தனது துறை சார்ந்த மீட்டிங் ஒன்றில் பங்கேற்க, சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தார் டெல்லி ‘கணக்கு’ மேடம். வழக்கமாக, டெல்லியிலிருந்து பெரிய தலைகள் யார் சென்னை வந்தாலும், அவர்களை ஓடோடிச் சென்று வரவேற்பார் இங்கிருக்கும் மலர்க் கட்சியின் மாநிலப் புள்ளி. ஆனால் ‘கணக்கு’ மேடத்தை வரவேற்பதை மட்டும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறாராம். சமீபத்தில் ஒரு மாற்றமாக, டெல்லி மேடத்தைச் சந்திக்க நேரம் கேட்டிருந்திருக்கிறார் மாநிலப் புள்ளி. ‘அலுவல்ரீதியான பிரச்னை என்றால் வாருங்கள். மற்றபடி தனியே சந்தித்துப் பேச எனக்கு நேரமில்லை...’ என நோஸ் கட் செய்துவிட்டாராம் மேடம். இதில் கடுப்பான மாநிலப் புள்ளி, ‘கட்சி சார்பாக யாரும் டெல்லி மேடத்தை வரவேற்கவும் வழியனுப்பவும் செல்லக் கூடாது’ என ரகசிய உத்தரவு போட்டுவிட்டாராம். ‘இருவருக்கும் இடையே அப்படி என்னதான் பகை?’ என மலர்க்கட்சி ஆபீஸில், பெரிய பட்டிமன்றமே நடக்கிறதாம்!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில்தான், மலர்க் கட்சியிலிருந்து விலகி ‘மைக்’ கட்சியில் இணைந்தார் வனப்புள்ளியின் பெண் வாரிசு. கட்சியில் இணைந்த ஓராண்டிலேயே அவருக்கு இளைஞரணியில் முக்கியப் பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பது, ‘அண்ணன்’ தலைவரின் குடும்பத் தலைவி அனுக்கிரகத்தால்தான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். தனக்கு வேண்டியவர்களுக்குப் பொறுப்பு வழங்குவது, வேண்டாதவர்களைக் கட்டம் கட்டுவது என, கட்சிச் செயல்பாடுகளில் படு ஆர்வம் காட்டுகிறாராம் குடும்பத் தலைவி. ‘கட்சியின் மாநில நிர்வாகிகளைக் கண்காணிக்கும் அவர், பசை விவகார நிர்வாகப் பொறுப்பையும் இப்போது தன்வசம் வைத்திருக்கிறாராம். `வீட்டுப் பக்கம் இவர்களெல்லாம் வரலாம்... இவர்களெல்லாம் வரக்கூடாது’ என்று குடும்பத் தலைவி போடும் உத்தரவை, அண்ணன் தலைவரால்கூட மறுக்க முடியவில்லையாம். அந்தளவுக்குக் குடும்பத் தலைவியின் பவர் கட்சிக்குள் உயர்ந்துவிட்டது’ என்கிறார்கள் ‘மைக்’ கட்சி வட்டாரத்தில்!

தமிழ்நாடு கதர்க் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழு, குறட்டைவிட்டு தூங்குகிறது எனக் கொதிக்கிறார்கள் கதர் புள்ளிகள். ‘தமிழகம் முழுவதும் கிராம கமிட்டிகளை அமைக்க வேண்டும்’ என்கிற ஒரே ஒரு பணிதான் அந்தக் குழுவுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அந்த வேலையைக்கூட செய்யவில்லையாம். அதற்கு, குழுத் தலைவர் மீதான அவநம்பிக்கைதான் காரணம் என்கிறார்கள் கதர்ப் புள்ளிகள். ‘ஆரம்பம் முதலே சூரியக் கட்சியின் அனுதாபியாக இருக்கும் குழுத் தலைவரை, கதர்க் கட்சித் தொண்டர்கள் நம்பவில்லை. கட்சி மீட்டிங்கிலும் சூரியக்கட்சியின் புகழைத்தான் குழுத் தலைவர் பாடுகிறார். கமிட்டி அமைப்பதில்கூட அவர் ஆர்வம் காட்டவில்லை. அதற்காகச் சுற்றுபயணமும் செய்வதில்லை. இரண்டு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியதைத் தவிர, வேறு எதையுமே ஆக்கப்பூர்வமாக செய்யவில்லை’ என்று கொதிக்கிறார்கள் கதர் புள்ளிகள்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

`அதிமுக-வை அழிவை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார்‌ எடப்பாடி பழனிசாமி!' - ஆ.ராசா சொல்வதென்ன?

தி.மு.க மாணவர் அணியின் மாநில அளவிலான மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் இன்று நடைபெற்றது. மாணவர் அணியின் மா... மேலும் பார்க்க

Sujatha Karthikeyan: விருப்ப ஓய்வு பெறும் ஒடிஷாவின் 'பவர்ஃபுல் IAS' - யார் இவர்?

ஒடிஷாவின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சுஜாதா கார்த்திகேயன் விருப்ப ஓய்வு பெறுகிறார்.கடந்த மார்ச் 13ம் தேதி மத்திய அரசு அவரது விருப்ப ஓய்வுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்தது. ஒடிஷா அரசு தேவையான அறிவிப்பை ... மேலும் பார்க்க

'திரும்ப போய்விடுங்கள்' - வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை - காரணம் என்ன?

அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள் சட்டத்திற்கு புறம்பான செயல்கள், போராட்டங்களில் ஈடுபட்டால் அமெரிக்க மாணவர்களின் படிப்பு நிறுத்தப்படும் அல்லது கைது செய்யப்படுவார்கள். வெளிநாட்டு மாணவர்கள் அவர்கள் நாட்... மேலும் பார்க்க

"எதையும் மாற்றிப் பேசவில்லை; எந்தக் கட்சியையும் அழித்து வளர மாட்டோம்" - அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கூட்டணி குறித்து நான் பேச முடியாது. உள்துறைஅமைச்சரின்கருத்தையே இறுதியாக எடுத்துக் கொள்ளுங்கள்.... மேலும் பார்க்க

"திமுக கூட்டணி, சூட்கேஸ் கூட்டணி; கொள்கைக் கூட்டணி கிடையாது" - சொல்கிறார் செல்லூர் ராஜூ

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொடிமங்கலம் புதூர் கிராமத்தில் நடந்த விழாவில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசும்போது, "100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்திக் ... மேலும் பார்க்க

`உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன; திமுக நிர்வாகிகள் கவனமாக பேசவேண்டும்'- ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை

ராமேஸ்வரம் நகர் திமுக சார்பில் பட்ஜெட் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நகர் மன்ற தலைவர் நாசர் கான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறைப்புரையாற்றிய திமுக-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ''யார் கட... மேலும் பார்க்க