செய்திகள் :

கையில் ஏர் கன்னுடன் வீடுகளில் திருட நோட்டமிட்ட இளைஞர்கள்; மடக்கிப் பிடித்த பொதுமக்கள்- என்ன நடந்தது?

post image

வீடுபுகுந்து திருடுவதற்கு ஏர் கன்னுடன் சுற்றிவந்த இளைஞரை பிடித்து கிராம மக்கள் போலீஸில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பானங்குளத்தில் சந்தேகப்படும்படி இளைஞர்கள் இருவர் டூவீலரில் சுற்றிக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்த கிராம மக்கள் அவர்களை மடக்கி விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் மேலும் சந்தேகமடைந்த கிராமத்தினர், அவர்கள் வைத்திருந்த பையை திறந்து காட்டுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து சுதாரித்துக்கொண்ட இளைஞர்களில் ஒருவர் கிராம மக்களின் பிடியில் இருந்து தப்பி ஓடினார்.

காவல் அலுவலகம்

மற்றொருவர் தப்பி ஓட முயலும்போது வளைத்து பிடித்த பொதுமக்கள் இதுபற்றி காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலை தொடர்ந்து விரைந்து வந்த கிருஷ்ணன்கோவில் போலீஸார், பிடிபட்ட நபரை காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பிடிபட்ட நபர் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த ராஜேஷ் (வயது 34) என தெரியவந்தது. தப்பி ஓடிய இளைஞர் ராமநாதபுரத்தை சேர்ந்த ஆரோக்கியஜான் என்பதும், இருவரும் அப்பகுதியில் வீடுகளில் திருடும் நோக்கத்திற்காக டூவீலரில் நோட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ராஜேஷ் வைத்திருந்த உடமைகளை சோதனை செய்ததில் 'ஏர் கன்' மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இருவர் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டதில், பிடிபட்ட ராஜேஷ் மீது 15-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மேலும், திருட்டு வழக்கில் கைதாகி சேலம் சிறையில் இருந்தபோது ஆரோக்கிய ஜான் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பேரில் இருவரும் நட்பாகி திருடுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ராஜேஷை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து 'ஏர் கன்' பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய ஆரோக்கிய ஜானை தீவிரமாக தேடிவருகின்றனர்" என்றனர்.

"தன்னுடன் பேச மறுத்ததால் உயிரோடு தீ வைத்த காதலன்" - சிகிச்சை பலனின்றி இளம்பெண் உயிரிழந்த பரிதாபம்!

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி காளியம்மாள். கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் தனது கணவரை பிரிந்து தனது 2 மகன்கள் மற்றும் மகளுடன... மேலும் பார்க்க

காவலர் கொலையில் 3 பேர் சிறையில் அடைப்பு; சுடப்பட்ட குற்றவாளிக்குத் தீவிர சிகிச்சை

உசிலம்பட்டியில் போலீஸ்காரர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேரைக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.சுடப்பட்ட பொன்வண்ணன்மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்... மேலும் பார்க்க

வீட்டில் ஸ்டூடியோ; மாடல்களுக்கு லட்சத்தில் சம்பளம்; ஆபாச வீடியோ நெட்வொர்க்கை இயக்கிய நொய்டா தம்பதி!

உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் சட்டவிரோதமாக ஆன்லைனில் ஆபாச வீடியோ வெளியிடப்படுவதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நொய்டாவில் உள்ள உஜ்வால் என்பவரத... மேலும் பார்க்க

உசிலம்பட்டி போலீஸ் கொலை வழக்கு: கேரளா தப்ப முயன்ற ரௌடி சுட்டுப் பிடித்த போலீஸார் - நடந்தது என்ன?

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் தலைமைக் காவலர் முத்துக்குமார் (40). இவர் கடந்த 2009-ல் காவல்துறையில் பணிக்கு சேர்ந்து, தற்போது உசிலம்பட்டி காவல் ஆய்வாளருக்கு டிரைவராக பணிய... மேலும் பார்க்க

பிரபல ரௌடி அசோக்கைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்.. செங்கல்பட்டு வனப்பகுதியில் நடந்ததென்ன?

செங்கல்பட்டு அருகே உள்ள திருப்போரூர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் (30). இவர் ஏ பிளஸ் ரௌடி. சிறையிலிருந்து வெளியில் வந்த அசோக்கை போலீஸார் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அசோக் தலைமையிலான ரௌடி டீம், தி.மு... மேலும் பார்க்க

சென்னை: மருத்துவ மாணவிக்குப் பாலியல் தொல்லை - மாணவனைத் தேடும் போலீஸ்!

சென்னையில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் எம்.டி.எஸ் 2-ம் ஆண்டு படித்து வருகிறார் 26 வயது மாணவி ஒருவர். இவர் கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், அதே கல்லூரியில் படி... மேலும் பார்க்க