செய்திகள் :

வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்கும் இந்தியா!

post image

வெளிநாடுகளில் இந்திய நிறுவனங்களின் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது.

வெளிநாடுகளில் பெரிய ஒப்பந்தங்கள் மற்றும் நிலையான முதலீடுகள் காரணமாக, வெளிநாடுகளுக்கு இந்திய நிறுவனங்கள் அனுப்பும் நிதியளவு அதிகரித்து வருவதாக இந்திய ரிசர்வ் வங்கியின் தரவில் தெரிவித்துள்ளது.

2024 - 25 நிதியாண்டின் முதல் 11 மாதங்களில், வெளிநாடுகளுக்கு இந்திய நிறுவனங்கள் 36 பில்லியன் டாலர் முதலீட்டை வெளிநாட்டு நேரடி முதலீடு மூலம் அனுப்பியுள்ளது.

இது கடந்தாண்டைவிட 40 சதவிகிதம் அதிகம். நிதியாண்டு 24-ல் 25 பில்லியன் டாலரும், நிதியாண்டு 23-ல் 24.8 டாலர் முதலீடு மட்டுமே அனுப்பப்பட்டது.

அதுமட்டுமின்றி, கடந்த 38 மாதங்களில் இல்லாத வகையில், இந்தாண்டு பிப்ரவரியில் மட்டும் 5.35 பில்லியன் டாலர் அனுப்பப்பட்டுள்ளது.

ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களின் முதலீடு பரவியுள்ளது. அமெரிக்காவில் இந்தியா முதலீடு செய்யும் நிறுவனங்கள் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்பத் துறைதான்.

வணிக நோக்கங்களுக்காக ஆண்டுதோறும் 1 பில்லியன் டாலர்வரை வெளிநாடுகளுக்கு அனுப்ப, நிறுவனங்களை வெளிநாட்டு நேரடி முதலீடு அனுமதிக்கிறது.

இதையும் படிக்க:முதலீட்டில் செயல் நுண்ணறிவு: இளம் தலைமுறையினர் அபாரம்!

ஸ்மார்ட்போன்களில் நேரம் செலவிடும் இந்தியர்களால் வருவாய் அதிகரிப்பு!

இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை வளர்ச்சியடைவதாக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் எர்ன்ஸ் & யங்கின் ஆய்வில் தெரிவித்துள்ளது.இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு த... மேலும் பார்க்க

ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் 7 பேர் காயம்

ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் ஏழு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒடிசா மாநிலம், மங்குலி அருகே நிர்குன்டியில் பெங்களூரு-காமாக்யா எக்ஸ்பிரஸ் ... மேலும் பார்க்க

தாணேவில் தடை செய்யப்பட்ட 238 இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல்

தாணேயில் தடை செய்யப்பட்ட 238 கோடீன் இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தின் ஷில் டைகர் பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் இருசக்கர வாகனத்தில் 22 வயது நபரைப் பி... மேலும் பார்க்க

புவனேஸ்வரில் பல்கலை. விடுதியில் முதுகலை மாணவர் சடலம் மீட்பு

புவனேஸ்வரில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் இருந்து முதுகலை மாணவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழக விடுதி வளாகத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை காலை முதுகலை மாணவரி... மேலும் பார்க்க

பெங்களூரு ஏசி விரைவு ரயிலில் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!

பெங்களூரு ஏசி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பெங்களூரிலிருந்து தமிழகம், ஆந்திரா வழியாக அஸ்சாம் செல்லும் இந்த ரயில், ஒடிஸாவில் கட்டாக் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது ரயிலின் 11 பெட்... மேலும் பார்க்க

மனதின் குரல் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை!

மனதின் குரல் நிகழ்ச்சியில் யோகா நாள், கோடைக்காலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி நாட்ட... மேலும் பார்க்க