செய்திகள் :

'என்னை கல்யாணம் பண்ணிட்டு அவகூட ஹனிமூனா?' - கோவை விமான நிலையத்தில் இளைஞரிடம் வாக்குவாதம் செய்த பெண்!

post image

கோவை விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து நேற்று இரவு விமானம் வந்தது. அதில் ஒரு இளம் தம்பதி வந்திருந்தனர். அண்மையில் திருமணமான அந்த தம்பதியினர் ஹனிமூனுக்காக எகிப்து சென்றுவிட்டு கோவை திரும்பியுள்ளனர். அந்த தம்பதியை வரவேற்க அவர்களின் குடும்பத்தினரும் விமான நிலையம் வந்திருந்தனர்.

தம்பதி மற்றும் இளம்பெண்

அப்போது அங்கு திடீரென ஒரு இளம்பெண் தம்பதி வெளியே வரும்போது, “என்னை கல்யாணம் பண்ணிட்டு அவக்கூட ஹனிமூன் போயிட்டு வரியா. பொம்பளை பொறுக்கி.” என்று திட்ட தொடங்கினார்.

தன் கணவரை மற்றொரு பெண் திட்டுவதை பார்த்து என்ன செய்வதென்று அறியால் மனைவி திகைத்து நின்றார். அந்த இளைஞரின் உறவினர் ஒருவர் இளம் பெண்ணின் கையை பிடித்து இழுத்து சமரசம் செய்ய முயற்சி செய்தார். தம்பதி அங்கிருந்து காரில் கிளம்பினர். இளம்பெண் அவர்களை பின் தொடர்ந்து சென்று,

இளம்பெண்

“அவனை நம்பாதே.. அவன் பொம்பளை பொறுக்கி.” என்று கூச்சலிட்டார். ஆனால் இளைஞரின் உறவினர் பெண்ணின் கையை விடவே இல்லை. இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் அவரின் கன்னத்தில் அறைந்தார்.

மேலும் அவரின் சட்டையைப் பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்தனர். “காசு இருந்தா என்ன வேண்டுமானாலும் பண்ணுவீங்களா.” என்று ஆவேசமாக கேட்டார்.  சுற்றி பலர் வேடிக்கை பார்த்து வீடியோ எடுத்து கொண்டிருந்தனர்.

இளம் பெண்

அவர்களை பார்த்து, “இவ்ளோ பேர் வீடியோ எடுக்கறீங்க. அவனை யாராவது பிடிச்சீங்களா. அவன் மேல பீளமேடு ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்துருக்கேன்.” என்றும் அந்த பெண் கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொழிலதிபர் ஒருவரின் மகனான அந்த இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் அந்த இளம்பெண்ணுடன் பழகி காதலித்துள்ளனர். பிறகு இளைஞருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமானதால் அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதற்கு இளைஞர் இந்த பெண்ணுக்கு தாலி கட்டி சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம்

இதனிடையே மற்றொரு பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றியதால், அவர் ஆத்திரமடைந்து விமான நிலையத்தில் பிரச்னை செய்துள்ளார். இது குறித்து பீளமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

"தன்னுடன் பேச மறுத்ததால் உயிரோடு தீ வைத்த காதலன்" - சிகிச்சை பலனின்றி இளம்பெண் உயிரிழந்த பரிதாபம்!

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி காளியம்மாள். கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் தனது கணவரை பிரிந்து தனது 2 மகன்கள் மற்றும் மகளுடன... மேலும் பார்க்க

காவலர் கொலையில் 3 பேர் சிறையில் அடைப்பு; சுடப்பட்ட குற்றவாளிக்குத் தீவிர சிகிச்சை

உசிலம்பட்டியில் போலீஸ்காரர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேரைக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.சுடப்பட்ட பொன்வண்ணன்மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்... மேலும் பார்க்க

வீட்டில் ஸ்டூடியோ; மாடல்களுக்கு லட்சத்தில் சம்பளம்; ஆபாச வீடியோ நெட்வொர்க்கை இயக்கிய நொய்டா தம்பதி!

உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் சட்டவிரோதமாக ஆன்லைனில் ஆபாச வீடியோ வெளியிடப்படுவதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நொய்டாவில் உள்ள உஜ்வால் என்பவரத... மேலும் பார்க்க

உசிலம்பட்டி போலீஸ் கொலை வழக்கு: கேரளா தப்ப முயன்ற ரௌடி சுட்டுப் பிடித்த போலீஸார் - நடந்தது என்ன?

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் தலைமைக் காவலர் முத்துக்குமார் (40). இவர் கடந்த 2009-ல் காவல்துறையில் பணிக்கு சேர்ந்து, தற்போது உசிலம்பட்டி காவல் ஆய்வாளருக்கு டிரைவராக பணிய... மேலும் பார்க்க

பிரபல ரௌடி அசோக்கைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்.. செங்கல்பட்டு வனப்பகுதியில் நடந்ததென்ன?

செங்கல்பட்டு அருகே உள்ள திருப்போரூர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் (30). இவர் ஏ பிளஸ் ரௌடி. சிறையிலிருந்து வெளியில் வந்த அசோக்கை போலீஸார் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அசோக் தலைமையிலான ரௌடி டீம், தி.மு... மேலும் பார்க்க

சென்னை: மருத்துவ மாணவிக்குப் பாலியல் தொல்லை - மாணவனைத் தேடும் போலீஸ்!

சென்னையில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் எம்.டி.எஸ் 2-ம் ஆண்டு படித்து வருகிறார் 26 வயது மாணவி ஒருவர். இவர் கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், அதே கல்லூரியில் படி... மேலும் பார்க்க