செய்திகள் :

கேரளம்: வன விலங்குகள் தாக்குதலில் 344 பேர் பலி!

post image

கேரளத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் வன விலங்குகள் தாக்குதலில் 344 பேர் பலியானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வனத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் கேரளத்தில் மட்டும் 2021 - 2025 ஆண்டுகளில் 344 பேர் வன விலங்குகள் தாக்கி பலியானதாகத் தெரிவித்தார்.

இதில், 180 பேர் பாம்பு கடித்ததால் பலியானதாகவும், 103 பேர் யானைகள் தாக்கியும் 35 பேர் காட்டுப் பன்றிகள் தாக்கி பலியானதாகவும் அவர் கூறினார். 4 பேர் புலிகள் தாக்கி பலியாகியுள்ளனர்.

”மனிதர்களின் வாழ்வுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே நாம் சமநிலையைப் பேண வேண்டும். கோவையில் உள்ள சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று ஆய்வு மையத்தை மனித - விலங்கு மோதல் தொடர்பான ஆய்வு மையமாக முன்னேற்ற முடிவெடுத்துள்ளோம். யானைகளின் வழித்தடங்களை கண்காணித்து அதுபற்றி உள்ளூர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம்.

மேலும், ரயில்வே துறையுடன் இணைந்து யானைகள் வழித்தடம் குறித்து ஆராய்ந்து வருகிறோம்” என்று அமைச்சர் பேசினார்.

காட்டுப் பன்றிகளைக் கொல்ல பாதிக்கப்பட்ட பல கிராம பஞ்சாயத்துகளுக்கு மாநில அரசின் மூலம் அதிகாரம் வழங்க மத்திய அரசு அனுமதிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

பாலக்காடு பகுதியில் பல இடங்களில் காட்டுப் பன்றிகள் மனிதர்களைத் தாக்கியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் வயநாடு பகுதிக்கு பார்வையிட சென்ற அமைச்சர் விலங்குகளின் தாக்குதல் தொடர்பான விவரஙகளைக்க் கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | குஜராத்: மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் அரசு பள்ளிகள் மூடல்!

ஸ்மார்ட்போன்களில் நேரம் செலவிடும் இந்தியர்களால் வருவாய் அதிகரிப்பு!

இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை வளர்ச்சியடைவதாக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் எர்ன்ஸ் & யங்கின் ஆய்வில் தெரிவித்துள்ளது.இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு த... மேலும் பார்க்க

ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் 7 பேர் காயம்

ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் ஏழு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒடிசா மாநிலம், மங்குலி அருகே நிர்குன்டியில் பெங்களூரு-காமாக்யா எக்ஸ்பிரஸ் ... மேலும் பார்க்க

தாணேவில் தடை செய்யப்பட்ட 238 இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல்

தாணேயில் தடை செய்யப்பட்ட 238 கோடீன் இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தின் ஷில் டைகர் பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் இருசக்கர வாகனத்தில் 22 வயது நபரைப் பி... மேலும் பார்க்க

புவனேஸ்வரில் பல்கலை. விடுதியில் முதுகலை மாணவர் சடலம் மீட்பு

புவனேஸ்வரில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் இருந்து முதுகலை மாணவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழக விடுதி வளாகத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை காலை முதுகலை மாணவரி... மேலும் பார்க்க

பெங்களூரு ஏசி விரைவு ரயிலில் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!

பெங்களூரு ஏசி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பெங்களூரிலிருந்து தமிழகம், ஆந்திரா வழியாக அஸ்சாம் செல்லும் இந்த ரயில், ஒடிஸாவில் கட்டாக் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது ரயிலின் 11 பெட்... மேலும் பார்க்க

மனதின் குரல் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை!

மனதின் குரல் நிகழ்ச்சியில் யோகா நாள், கோடைக்காலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி நாட்ட... மேலும் பார்க்க