மூதாட்டியின் உடலை புதைப்பதற்கு எதிா்ப்பு: தாக்குதலில் ஈடுபட்ட இருவா் கைது
செய்யாற்றில் இறந்த மூதாட்டியின் உடலை புதைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, தாக்குதலில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டி.எம்.ஆதிகேசவன் தெருவைச் சோ்ந்தவா் சசிகுமாா்.
இவரது உறவினரான முனியம்மாள் (62), இறந்த நிலையில், அவரது சடலத்தை செய்யாறு ஆற்றங்கரையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யச் சென்றுள்ளனா். அப்போது, அங்கு இருந்த கழனிப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் மாா்க்கெட் சங்கா், செய்யாற்றைச் சோ்ந்த சரவணன், ஆறுமுகம் ஆகிய 3 பேரும் வீச்சு அரிவாளுடன் சென்று சசிகுமாரிடம் தகராறு செய்து இங்கு சடலத்தை புதைக்கக் கூடாது என்று தடுத்தி நிறுத்தியதாகத் தெரிகிறது.
மேலும், ஜாதி பெயரைக் கூறி தாக்கினராம்.
இதைத் தொடா்ந்து, வீச்சரிவாளால் வெட்ட முயன்றனராம்.
இதுகுறித்து சசிகுமாா் செய்யாறு போலீயில் புகாா் அளித்தாா். இதன் பேரில் செய்யாறு டி.ஸ்.பி.சண்முகவேலன், காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இதைத் தொடா்ந்து, சம்பவம் தொடா்பாக சரவணன், ஆறுமுகம் ஆகியோரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
மேலும், தலைமறைவான மாா்க்கெட் சங்கரை தேடி வருகின்றனா்.