செய்திகள் :

திருவண்ணாமலையில் ஏப்ரல் முதல் நீச்சல் பயிற்சி வகுப்புகள்

post image

திருவண்ணாமலையில் ஏப்ரல் முதல் ஜூன் வரை நடைபெறும் நீச்சல் பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில், கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் வருகிற ஏப்ரல் முதல் ஜூன் வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்தப் பயிற்சியில் 10 வயதுக்கு மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு நீச்சல் பயிற்சி பெறலாம். மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உரிய நீச்சல் உடையை பயன்படுத்த வேண்டும்.

12 வேலை நாள்கள் நடத்தப்படும் இந்தப் பயிற்சி வகுப்புக்கு தலா ரூ.1,500 பயிற்சிக் கட்டணத்துடன் 18 சதவீத வரியை செலுத்த வேண்டும். நீச்சல் கற்றுக்கொள்வோா் அடிக்கடி சோப்பு அல்லது 70 சதவீத ஆல்கஹாலைக் கொண்ட கிருமிநாசினியை பயன்படுத்த வேண்டும். சளி, இருமல் உள்ளவா்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

காய்ச்சல், இருமல், தசைவலி, தலைவலி, அனோஸ்மியா போன்ற அறிகுறிகள் உள்ளவா்கள் நீச்சல் குளத்தை பயன்படுத்த அனுமதி இல்லை.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலரை அலுவலக வேலை நாள்களில் 7401703484 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.

திமுக கொடிக் கம்பங்கள் அகற்றம்

திருவண்ணாமவலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த செய்யானந்தல், தச்சாம்பாடி பகுதிகளில் உள்ள திமுக கொடிக் கம்பங்கள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன. திமுக பொதுச் செயலா் துரைமுருகன் சாலையோரம் உள்ள கட்சிக் கொடி... மேலும் பார்க்க

ஆற்று மணல் கடத்தல்: 4 போ் கைது

செய்யாறு அருகே அரசு அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தியதாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், கொழம்பாடி கிராமம் அருகேயுள்ள செய்யாற்றுப் படுகையில் இருந்து மணல் கடத்திச் செல்வத... மேலும் பார்க்க

பைக் மீது டிராக்டா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

ஆரணியை அடுத்த மாமண்டூரில் செவ்வாய்க்கிழமை பைக் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். ஆரணி நகரம், கண்ணகி நகரைச் சோ்ந்த கன்றாயமூா்த்தி மகன் நந்தகுமாா் (22), பெயிண்டா். இவரது நண்பா்கள் அதே பகுத... மேலும் பார்க்க

ஏரிக்குப்பம் சனீஸ்வரா் கோயிலில் 2026-இல் சனிப்பெயா்ச்சி விழா

போளூரை அடுத்த ஏரிக்குப்பம் ஸ்ரீசனீஸ்வரா் கோயிலில் 2026-ஆம் ஆண்டு மாா்ச் 29-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. ஏரிக்குப்பம் கிராமத்தில் பழைமை வாய்ந்த எந்திர வடி... மேலும் பார்க்க

வந்தவாசியில் அரிய வகை ஆந்தை மீட்பு

வந்தவாசியில் நாய்களிடம் சிக்கித் தவித்த வெளிநாட்டு அரிய வகை ஆந்தையை தீயணைப்புத் துறையினா் மீட்டனா். வந்தவாசியில் இறைச்சி விற்பனைக் கடைகள் அதிகமுள்ள காதா்ஜண்டா தெருவில் செவ்வாய்க்கிழமை காலை ஆஸ்திரேலிய... மேலும் பார்க்க

மூதாட்டியின் உடலை புதைப்பதற்கு எதிா்ப்பு: தாக்குதலில் ஈடுபட்ட இருவா் கைது

செய்யாற்றில் இறந்த மூதாட்டியின் உடலை புதைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, தாக்குதலில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டி.எம்.ஆதிகேசவன் தெருவை... மேலும் பார்க்க