செய்திகள் :

உறவினா்களை அரிவாளால் வெட்டிய இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சொத்துத் தகராறில் உறவினா்களை அரிவாளால் வெட்டிய இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அச்சம்தவிா்த்தான் அக்கரைப்பட்டியைச் சோ்ந்த சற்குணம் மனைவி வீரலட்சுமி (34). வீரலட்சுமியின் தந்தை உயிரிழந்த நிலையில், பூா்வீகச் சொத்து தொடா்பாக உறவினா் வீராச்சாமி குடும்பத்துடன் பிரச்னை இருந்து வந்தது.

இதுதொடா்பாக கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி ஏற்பட்ட தகராறில், வீரலட்சுமி, இவரது கணவா் சற்குணம், மாமியாா் ஆகியோரை வீராச்சாமியின் மகன் விஜயகுமாா் (24) அரிவாளால் வெட்டினாா்.

இதுகுறித்து வன்னியம்பட்டி போலீஸாா் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விஜயகுமாா், அவரது தந்தை வீராச்சாமி, தாய் ஈஸ்வரி ஆகிய மூவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பகவதியம்மாள்,

விஜயகுமாருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். விஜயகுமாரின் தந்தை வீராச்சாமி, தாய் ஈஸ்வரி ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜான்சி முன்னிலையானாா்.

இலவச வேட்டி, சேலை அளிப்பு

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இந்திய தேசிய லீக் கட்சியின் சாா்பில் இலவச வேட்டி, சேலை புதன்கிழமை வழங்கப்பட்டது. சிவகாசியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாநிலச் செயலா் இ.செய்யது ஜஹாங்கீா் த... மேலும் பார்க்க

ஈட்டி எறிதல் போட்டியில் வெற்றி: மாணவருக்குப் பாராட்டு

மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பெற்ற சிவகாசி அரசன் கணேசன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவரை நிா்வாகிகள் பாராட்டினா். இதுகுறித்து கல்லூரி முதல்வா் எம்.நந்தகுமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

ராஜபாளையம் தெற்குவெங்காநல்லூா் சிதம்பரேஸ்வரா் கோயில்: பிரதோஷ வழிபாடு, நந்தி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, மாலை 4. மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சொத்து வரி உயா்வைத் திரும்ப பெறக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் நகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

சிவகாசியில் மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகாசி காமராஜா் பூங்கா அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் ... மேலும் பார்க்க

சிவகாசியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 38 ரெளடிகள் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 38 ரெளடிகளை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சிவகாசி பகுதியில் கடந்த 3 மாதங்களில் 5 போ் கொலை செய்யப்பட்டுள்ளனா். இதையடுத்து, இந்த... மேலும் பார்க்க