செய்திகள் :

"திமுக மொழியைத் தாண்டி விஞ்ஞான ரீதியாக ஏதும் சிந்திக்கவில்லை" - மருத்துவர் கிருஷ்ணசாமி விமர்சனம்

post image

தேனி மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் இன்று (மார்ச் 27) உள் இட ஒதுக்கீடு மற்றும் மாஞ்சோலை மலையக மக்களின் வாழ்வாதாரம் குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

இதில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

டாக்டர் கிருஷ்ணசாமி

அப்போது, "டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ. 1000 கோடி ஊழல் என்றால் அமலாக்கத்துறை முறையாக ஆய்வு செய்யவில்லை. 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றிருக்கக் கூடும் என்பதால் அது குறித்து அமலாக்கத்துறை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.

அ.தி.மு.க-வை ஒருங்கிணைக்க வேண்டும் என்றால் ஓ.பி.எஸ் வெளியில் பேசுவதைத் தவிர்த்து, கட்சிக்குள் பேசி பிரச்னையைத் தீர்க்க வேண்டும்.

மேலும் 2026 தேர்தலில் அ.தி.மு.க வலிமையாக இருக்க வேண்டும் என்றால் யாராவது ஒருவர் விட்டுக்கொடுக்க வேண்டும்.

மற்ற நாடுகளில் எல்லாம் 8ஆம் வகுப்பிலேயே தொழிற்கல்வி கற்றுக் கொடுக்கிறது. ஆனால் இங்கு இன்னும் ஏட்டுக் கல்விதான் கற்றுத் தரப்படுகிறது.

டாக்டர் கிருஷ்ணசாமி

தி.மு.க-வினர் மொழியை மட்டும் சிந்திக்கின்றனர். மொழியைத் தாண்டி விஞ்ஞான ரீதியாக ஏதும் சிந்திக்கவில்லை. 3 மொழி மட்டும் இல்லை 4 மொழி கற்றுக்கொண்டால் கூட தவறில்லை.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இந்தியைத்தான் கற்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. மத்திய அரசை எதிர்க்க வேறு வழியில்லாமல் தி.மு.க இந்தியை வைத்து அரசியல் செய்கிறது.

தமிழ் மொழி வளர்ச்சிக்காகத் தி.மு.க செய்தது என்ன? இந்தி கற்பதால் தமிழ் அழிந்து விடும் எனக் கூறுவது தவறு. தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது.

தமிழக மக்களுக்கு இந்தியன் என்ற உணர்வு இல்லாமல் தமிழகத்தைத் தனித்து வைத்து அரசியல் செய்வதற்காகத்தான் தி.மு.க-வினர் இந்தியை எதிர்க்கிறார்கள்.

திமுக

பட்டியலிலிருந்து தேவேந்திர குல வேளாளர் மக்களை வெளியேற்ற வேண்டும் என்பது எங்கள் கொள்கை. அதை நிறைவேற்றித் தருவோம் என்று கூறிய பா.ஜ.க எங்களை ஏமாற்றி விட்டதால்தான் கூட்டணியிலிருந்து வெளியேறினோம்.

தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கூட்டணியில் புதிய தமிழகம் அங்கம் வகிக்கும். அப்போது எங்களது கொள்கை நிறைவேற்றப்படும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Sujatha Karthikeyan: விருப்ப ஓய்வு பெறும் ஒடிஷாவின் 'பவர்ஃபுல் IAS' - யார் இவர்?

ஒடிஷாவின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சுஜாதா கார்த்திகேயன் விருப்ப ஓய்வு பெறுகிறார்.கடந்த மார்ச் 13ம் தேதி மத்திய அரசு அவரது விருப்ப ஓய்வுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்தது. ஒடிஷா அரசு தேவையான அறிவிப்பை ... மேலும் பார்க்க

'திரும்ப போய்விடுங்கள்' - வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை - காரணம் என்ன?

அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள் சட்டத்திற்கு புறம்பான செயல்கள், போராட்டங்களில் ஈடுபட்டால் அமெரிக்க மாணவர்களின் படிப்பு நிறுத்தப்படும் அல்லது கைது செய்யப்படுவார்கள். வெளிநாட்டு மாணவர்கள் அவர்கள் நாட்... மேலும் பார்க்க

"எதையும் மாற்றிப் பேசவில்லை; எந்தக் கட்சியையும் அழித்து வளர மாட்டோம்" - அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கூட்டணி குறித்து நான் பேச முடியாது. உள்துறைஅமைச்சரின்கருத்தையே இறுதியாக எடுத்துக் கொள்ளுங்கள்.... மேலும் பார்க்க

"திமுக கூட்டணி, சூட்கேஸ் கூட்டணி; கொள்கைக் கூட்டணி கிடையாது" - சொல்கிறார் செல்லூர் ராஜூ

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொடிமங்கலம் புதூர் கிராமத்தில் நடந்த விழாவில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசும்போது, "100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்திக் ... மேலும் பார்க்க

`உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன; திமுக நிர்வாகிகள் கவனமாக பேசவேண்டும்'- ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை

ராமேஸ்வரம் நகர் திமுக சார்பில் பட்ஜெட் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நகர் மன்ற தலைவர் நாசர் கான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறைப்புரையாற்றிய திமுக-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ''யார் கட... மேலும் பார்க்க

'இது கட்டமைக்கப்பட்ட சுரண்டல்!' ஏ.டி.எம்மில் பணம் எடுத்தால் ரூ.23 வரை கட்டணம்- RBI; ஸ்டாலின் கண்டனம்

வரும் மே மாதம் முதல், ஒரு மாதத்தில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஏ.டி.எம்களில் எடுக்கப்படும் பணத்திற்கு ரூ.2-ல் இருந்து ரூ.23 வரை வங்கிகள் கட்டணம் விதிக்கலாம் என்று கடந்த வெள்ளிக்கிழமை இந்திய ரிசர்வ் வங்... மேலும் பார்க்க