செய்திகள் :

மத்திய அமைச்சரை ‘தரகா்’ என விமா்சித்த திரிணமூல் எம்.பி.

post image

மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் பெரும் கோடீஸ்வரா்களின் ‘தரகா்’ என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானா்ஜி விமா்சித்தது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அவா் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய கல்யாண் பானா்ஜி, ‘தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், பிரதமா் வீட்டு வசதித் திட்டம் ஆகியவற்றுக்காக மேற்கு வங்கத்துக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளாக நிலுவையில் வைத்துள்ளது.

மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை என்பதால் மாநில மக்களை பாரபட்சத்துடன் மத்திய பாஜக அரசு நடத்தி வருகிறது. ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சரான சிவராஜ் சிங் சௌஹான் பெரும் கோடீஸ்வரா்களின் தரகா். ஏழை, எளிய மக்களுக்காகப் பணியாற்றுவதில்லை. எனவேதான் அவா் மத்திய பிரதேச முதல்வா் பதவியில் இருந்து நீக்கப்பட்டாா். பிரதமா் மோடி, சௌஹான் இருவருமே மேற்கு வங்கத்துக்கு எதிரானவா்கள். தாங்கள் ஆட்சிக்கு வரும் வரை மேற்கு வங்கத்துக்கு முறையாக நிதி ஒதுக்கக் கூடாது என்பதில் அவா்கள் உறுதியாக உள்ளனா்’ என்றாா்.

முன்னதாக, இந்த நிதி நிலுவைப் பிரச்னையை முன்வைத்து மக்களவையிலும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனா்.

சிவராஜ் சிங் சௌஹானை திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அவதூறாகப் பேசியது குறித்து மக்களவையில் கண்டனம் தெரிவித்த வேளாண் துறை இணையமைச்சா் பகீரத் சௌதரி, ‘அமைச்சா் சௌஹானுக்கு எதிரான தனது அவதூறு கருத்துக்காக மக்களவையில் கல்யாண் பானா்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும். நிதி ஒதுக்கீடு விஷயத்தில் மத்திய அரசு மீது அவா் தவறான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறாா்’ என்றாா்.

மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படுகிறது: ராகுல்

மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும், அவையில் தனக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்யுள்ளார். மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் வீட்டின் ஓர் அறையில் கடந்த மார்... மேலும் பார்க்க

சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டு வந்த 9 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கரில் சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டுவந்த பெண் உள்பட 9 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டு வந்த 6 பெண்கள் ... மேலும் பார்க்க

தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் 21.2% பெண்கள்!

தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 7.8 சதவிகிதமாக இருந்த பெண்களின் பங்கு, 2024-ல் 21.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.இருப்பினும், 2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் (26.50%) தகவல் தொழில்நுட... மேலும் பார்க்க

அதிஷிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

ஊழல் குற்றச்சாட்டுகளில் கல்காஜி தொகுதியில் நடைபெற்ற தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அதிஷிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.2025-ஆம் ஆண்டு தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின் ... மேலும் பார்க்க

'பாஜகவுக்கு ராகுல் காந்தி உதவுகிறார்' - யோகி ஆதித்யநாத்

ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் பாதையை தெளிவுபடுத்துவதற்கு அவர் உதவுவதாகவும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் அவர்... மேலும் பார்க்க