செய்திகள் :

பிரதமா் மோடி - முகமது யூனுஸ் சந்திப்பு: பரிசீலனையில் உள்ளதாக நாடாளுமன்றக் குழு தகவல்

post image

பிரதமா் நரேந்திர மோடி, வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் சந்தித்துப் பேச வேண்டும் என்ற வங்கதேசத்தின் பரிந்துரையை பரிசீலித்து வருவதாக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அடுத்த மாதம் தாய்லாந்தில் நடைபெறவுள்ள ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டின்போது இந்த சந்திப்பை நடத்த வங்கதேசம் பரிந்துரைத்த நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

நிகழாண்டுக்கான வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டம் சனிக்கிழமை தில்லியில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கே.சி.வேணுகோபால், மனீஷ் திவாரி, முகுல் வாஸ்னிக் மற்றும் சிவசேனை (உத்தவ் பிரிவு) எம்.பி. பிரியங்கா சதுா்வேதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தொடா் தாக்குதல் நடத்தப்படுவது, பாகிஸ்தான் மற்றும் மியான்மரில் இருந்து இந்தியாவுக்குள் போதைப்பொருள் கடந்தப்படுவது, மீனவா் பிரச்னை மற்றும் மியான்மா், இலங்கை, வங்கதேசத்துடனான இந்திய உறவுகள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதற்கு ஜெய்சங்கா் அளித்த பதில் குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சிறுபான்மையினரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல; அது அரசியல் ரீதியானது என வங்கதேச இடைக்கால அரசு தெரிவித்தது.

‘சாா்க்’ கூட்டமைப்பு செயலிழந்த நிலையில் இருப்பதற்கு பாகிஸ்தானே முக்கிய காரணம். எனவேதான் பிம்ஸ்டெக் கூட்டமைப்பை வலுப்படுத்த இந்தியா முயற்சிக்கிறது. வருகிற ஏப்ரல் 2 முதல் 4 வரை தாய்லாந்தில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்க வாய்ப்புள்ளது.

பிம்ஸ்டெக் மாநாட்டின்போது வங்கதேசஇடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் மற்றும் பிரதமா் மோடி இடையேயான சந்திப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற வங்கதேசத்தின் பரிந்துரையும் பரிசீலனையில் உள்ளது. அடுத்த மாதம் இலங்கைக்கு பிரதமா் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளாா் என தெரிவித்தாா்.

மேலும், பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான உறவுகள் குறித்து அடுத்து நடைபெறவுள்ள கூட்டத்தில் பேசுவதாகவும் ஜெய்சங்கா் தெரிவித்தாா். முன்னதாக, வங்கதேசம், மியான்மா், மாலத்தீவு மற்றும் இலங்கையுடனான உறவுகள் குறித்து விரிவாக காணொலி காட்சி மூலம் வெளியுறவு செயலா் விக்ரம் மிஸ்ரி எடுத்துரைத்தாா்.

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா நிறைவேற்றம்!

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் இன்று (மார்ச் 25) நிறைவேற்றப்பட்டது. பேரிடர் காலங்களில் மாநிலங்களின் திறமையான மீட்புப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்... மேலும் பார்க்க

அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111% அதிகரிப்பு!

உலகளவில் அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111.58% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2019-ல் அஸ்வகந்தா குறித்து 95 ஆய்வுகள் வெளியான நிலையில், 2024ஆம் ஆண்டில் 204 ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அ... மேலும் பார்க்க

வனவிலங்கு தாக்குதல்: ஒடிசாவில் 5 ஆண்டுகளில் 799 பேர் பலி!

ஒடிசாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வனவிலங்குகள் தாக்குதல்களில் இதுவரை 799 பேர் உயிரிழந்ததாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருர் தெரிவித்தார். பாஜக எம்பி பத்மா லோச்சன் பாண்டாவின் கேள்விக்கு வன மற்றும் சுற்றுச... மேலும் பார்க்க

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல், பிரியங்கா போராட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்... மேலும் பார்க்க

பெங்களூருவில் தாயின் உதவியுடன் கணவனைக் கொன்ற மனைவி! திடுக்கிடும் தகவல்கள்!!

பெங்களூருவில் பெண் ஒருவர், கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி தன் கணவனைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு சிக்கப்பவனாரா பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் காரில் லோக்நாத் ச... மேலும் பார்க்க

'நீதிமன்றம் குப்பைத்தொட்டி அல்ல' - நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு!

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் இன்று(மார்ச் 25) காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மாா்ச் 14-ஆம் ... மேலும் பார்க்க