செய்திகள் :

இந்தியா - வங்கதேச எல்லையில் கடத்தப்படும் கால்நடைகள்!

post image

மேற்கு வங்கத்திலுள்ள இந்தியா - வங்கதேசத்தின் எல்லையில் 16 கால்நடைகள் மற்றும் போதைப் பொருள் ஆகியவற்றை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மால்டா மாவட்டத்தின் எல்லைப் புறக்காவல் நிலையத்தில் நேற்று (மார்ச் 24) நள்ளிரவு இந்தியப் பகுதியிலிருந்து வங்கதேசம் நோக்கி 3 முதல் 4 நபர்கள் கால்நடைகளைக் கடத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்களை நோக்கி பாதுகாப்புப் படையினர் விரைந்த போது அவர்கள் கூர்மையான ஆயுதங்கள் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, பாதுகாப்பான தொலைவிலிருந்து அவர்களை நோக்கி அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனால், அவர்கள் கொண்டு வந்த கால்நடைகளை அங்கேயே விட்டுவிட்டு அந்த நபர்கள் அனைவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், அப்பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் அங்கிருந்து 7 கால்நடை விலங்குகள் மீட்கப்பட்டு எல்லைப் புறக்காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. மேலும் 5 கால்நடை விலங்குகள் அங்கு மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, இந்தியா - வங்கதேச எல்லையில் அமைந்துள்ள நதியா மாவட்டத்திலுள்ள எல்லைப் புறக்காவல் நிலையத்தில் கடத்தப்பட்ட 5 கால்நடை விலங்குகளையும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.

அதே இடத்தில் நடந்த மற்றொரு சோதனையில் எல்லைக் காவலர்கள் தடைசெய்யப்பட்ட இருமல் மருந்து அடங்கிய 851 பாட்டில்கள் மற்றும் 12.15 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 நிறைவேற்றம்!

பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட நக்சல்களின் உடல்கள் மீட்பு!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினரின் என்கவுன்டரில் பலியான 3 நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் க... மேலும் பார்க்க

விடியோ பதிவிட்ட பத்திரிக்கையாளருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக விடியோ பதிவிட்ட மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.கராச்சியைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளரும் ரஃப்தார் எனும் டிஜிட்டல... மேலும் பார்க்க

பிரதமர் நரேந்திர மோடியுடன் ‘தினமணி’ ஆசிரியர் கி. வைத்தியநாதன் சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியைத் தினமணி நாளிதழ் ஆசிரியர் கி. வைத்தியநாதன் சந்தித்துப் பேசினார்.தில்லியில் பிரதமரை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை சந்தித்த கி. வைத்தியநாதன், தினமணியின் 90 ஆம் ஆண்டு சிறப்பு மலர் ... மேலும் பார்க்க

பலூசிஸ்தானில் அரசுக்கு எதிராக செயல்படும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை: முதல்வர்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் அரசுக்கு எதிராக செயல்படும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலூசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக செ... மேலும் பார்க்க

ஆப்கனில் பெண் கல்வி மீதான தடை தலைமுறைகளைக் கடந்து பாதிக்கும்: ஐ.நா. கண்டனம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் கல்வி கற்க தலிபான்கள் விதித்துள்ள தடையானது தலைமுறைகளைக் கடந்து பாதிக்கும் என ஐக்கிய நாடுகளின் பெண்கள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் புதிய கல்வியாண்... மேலும் பார்க்க

உலகின் மொத்த பணமும் இருந்திருந்தால் விமானியாக மாறியிருப்பேன்: கிளன் பிலிப்ஸ்

உலகின் மொத்த பணமும் இருந்திருந்தால் விமானியாக மாறியிருப்பேன் என நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கிளன் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான கிளன் பிலிப்ஸ் அவரது பிரம்மிக்க வைக்கும்... மேலும் பார்க்க