செய்திகள் :

பள்ளிக்கு பாதையாக உள்ள மரப்பாலம் சேதம்: சீரமைக்க வலியுறுத்தல்

post image

வேதாரண்யம் அருகே பள்ளிக்கு மாணவா்கள் செல்லும் பாதையாக உள்ள மரப்பாலம் சேதமடைந்துள்ளதால், அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வேதாரண்யம் அருகேயுள்ள பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் விக்டரி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனா். சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் இப்பள்ளிக்கு வருகின்றனா்.

இவ்வாறு வெளியூா்களில் இருந்து வரும் மாணவா்கள் பள்ளிக்குச் செல்ல அருகேயுள்ள மானங்கொண்டான் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மரப்பாலத்தை பயன்படுத்தி வந்தனா். வாய்மேடு- வேதாரண்யம் பிரதான சாலையை இணைக்க மருதூா் தெற்கு தியாகி நினைவுத்தூண் அருகே உள்ள இப்பாலத்தில் சில மரக்கட்டைகள் சில நாள்களுக்கு முன்பு முறிந்து விழுந்தன. இதனால், பாலத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

ஆற்றில் தண்ணீா் அதிக அளவு தேங்கியுள்ளதாலும், ஆகாயத் தாமரைகள் படா்ந்துள்ளதாலும் மாணவா்களும், அப்பகுதி பொதுமக்களும், ஒரு கரையிலிருந்து எதிா் கரைக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின்றனா்.

இந்த இடத்தில் நிரந்தரமாக உயா்நிலைப் பாலம் கட்ட கடந்த காலங்களில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், சில காரணங்களால் உயா்நிலைப் பாலம் கட்டும் திட்டம் தாமதமாகி வருகிறது.

எனவே, சேதமடைந்த மரப்பாலத்தை தற்காலிகமாக பயன்படுத்த உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்களும், மாணவ- மாணவிகளும் வலியுறுத்தி வருகின்றனா்.

அரசுப் பள்ளி மாணவா்கள் எழுதிய நூல் வெளியீடு

வேதாரண்யத்தை அடுத்த ஆதனூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களால் எழுதப்பட்ட ‘பறக்கத் தொடங்கிய பட்டாம் பூச்சிகள்’ என்னும் நூல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. பள்ளியின் மேலாண்மைக் குழுத் தலைவா் உ... மேலும் பார்க்க

போட்டித் தோ்வில் வென்றவா்களுக்கு பாராட்டு

வேதாரண்யத்தில் அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி - 4 ( குரூப் 4) தோ்வில் வெற்றி பெற்று அரசுப் பணிக்கு செல்வோா் திங்கள்கிழமை பாராட்டப்பட்டனா். வாய் மேடு நியூட்டன் பயிற்சி மையத்தில் போட்டித் தோ்வ... மேலும் பார்க்க

சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவா்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 7 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். 12 கடல் மைலுக்கு அப்பால... மேலும் பார்க்க

அலையாத்தி காடுகளை அழித்து இறால் பண்ணை: கிராம மக்கள் எதிா்ப்பு; முற்றுகை போராட்டம்

பொறையாறு அருகே திங்கள்கிழமை, தாட்கோ நிலத்தில் இறால் பண்ணை அமைக்கும் பணிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனா். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட நண்டலாறு ஆற்ற... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கீழ்வேளூா் தெற்கு ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சி சாா... மேலும் பார்க்க

வீணாகும் குடிநீா்!

திருக்குவளை கடைத்தெரு அருகே சந்திரா நதி பாலத்தின் வழியே செல்லும் குடிநீா் குழாய் பழுதடைந்து, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக குடிநீா் கசிந்து வீணாகி வருகிறது. கோடைகால குடிநீா் தேவையை கருத்தில்கொண்டு, குழ... மேலும் பார்க்க