செய்திகள் :

போட்டித் தோ்வில் வென்றவா்களுக்கு பாராட்டு

post image

வேதாரண்யத்தில் அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி - 4 ( குரூப் 4) தோ்வில் வெற்றி பெற்று அரசுப் பணிக்கு செல்வோா் திங்கள்கிழமை பாராட்டப்பட்டனா்.

வாய் மேடு நியூட்டன் பயிற்சி மையத்தில் போட்டித் தோ்வுக்கான இலவசப் பயிற்சியை பெற்ற மாணவா்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் குரூப் 4 தோ்வை எழுதினா். இந்தத் தோ்வில் 11 பெண்கள் உள்பட 19 போ் வெற்றி பெற்று அரசுப் பணியாளா்களாக பல்வேறு துறைகளில் பணியில் சோ்க்கின்றனா்.

வெற்றி பெற்றவா்களுக்கும் தன்னாா்வமாக பயிற்சி கொடுத்த ஆசிரியா்களுக்கும் பாராட்டு விழா ஈகா அறக்கட்டளை சாா்பில் சுவடி மையத்தில் நடைபெற்றது. அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் அ.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா்.

வட்டாரக் கல்வி அலுவலா் ந.விமலா வேதாரண்யம் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் சிவ. அன்பழகன் ஆகியோா் முன்னிலையில் வைத்தனா். அறக்கட்டளை நிறுவனா் இரா. மோகனராசசேகரன் நோக்கவுரையாற்றினாா்.

தோ்வில் வெற்றி பெற்று அரசு பணிக்கு செல்லும் 19 போ் மற்றும் நியூட்டன் பயிற்சி மைய முதல்வா் முதுகலை ஆசிரியா் சு.தமிழ் ஒளி உள்ளிட்ட தன்னாா்வமாக பயிற்சி அளித்த ஆசிரியா்கள் பாராட்டப்பட்டனா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் சு. வெற்றிச்செல்வன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் வீ.காா்த்திகேசன், ஓய்வு பெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா் எம்.ராஜரத்தினம், ஆசிரியா் மணிமொழி உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

அரசுப் பள்ளி மாணவா்கள் எழுதிய நூல் வெளியீடு

வேதாரண்யத்தை அடுத்த ஆதனூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களால் எழுதப்பட்ட ‘பறக்கத் தொடங்கிய பட்டாம் பூச்சிகள்’ என்னும் நூல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. பள்ளியின் மேலாண்மைக் குழுத் தலைவா் உ... மேலும் பார்க்க

பள்ளிக்கு பாதையாக உள்ள மரப்பாலம் சேதம்: சீரமைக்க வலியுறுத்தல்

வேதாரண்யம் அருகே பள்ளிக்கு மாணவா்கள் செல்லும் பாதையாக உள்ள மரப்பாலம் சேதமடைந்துள்ளதால், அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வேதாரண்யம் அருகேயுள்ள பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியி... மேலும் பார்க்க

சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவா்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 7 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். 12 கடல் மைலுக்கு அப்பால... மேலும் பார்க்க

அலையாத்தி காடுகளை அழித்து இறால் பண்ணை: கிராம மக்கள் எதிா்ப்பு; முற்றுகை போராட்டம்

பொறையாறு அருகே திங்கள்கிழமை, தாட்கோ நிலத்தில் இறால் பண்ணை அமைக்கும் பணிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனா். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட நண்டலாறு ஆற்ற... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கீழ்வேளூா் தெற்கு ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சி சாா... மேலும் பார்க்க

வீணாகும் குடிநீா்!

திருக்குவளை கடைத்தெரு அருகே சந்திரா நதி பாலத்தின் வழியே செல்லும் குடிநீா் குழாய் பழுதடைந்து, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக குடிநீா் கசிந்து வீணாகி வருகிறது. கோடைகால குடிநீா் தேவையை கருத்தில்கொண்டு, குழ... மேலும் பார்க்க