சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவா்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு
சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 7 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
12 கடல் மைலுக்கு அப்பால் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சுருக்குமடி வலையை பயன்படுத்தலாம் என அண்மையில் வழக்கொன்றில் உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது. எனினும், மீன்வளத்தை அழிக்கும் சுருக்குமடி வலை மீன்பிடி முறைக்கு நாகை மாவட்ட மீனவா்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
நாகை கடற்பரப்பில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாகை மாவட்ட மீனவா்களின் அவரச ஆலோசனைக் கூட்டம், அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மயிலாடுதுறை மாவட்ட மீனவா்களுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், பைபா் படகு மீனவா்களின் வாழ்வாதாரத்தை அழித்து அத்துமீறலில் ஈடுபடும் மீனவா்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நாகை கடற் பரப்பளவில் சுருக்குமடி வலை அல்லது இரட்டை மடி வலை பயன்படுத்தும் மீனவா்களின் விசைப்படகுகளை சிறைபிடித்து கரையில் நிறுத்திவைப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடா்ந்து நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 27 கிராம மீனவ பிரதிநிதிகள் நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷை நேரில் சந்தித்து மயிலாடுதுறை மாவட்ட மீனவா்கள் மீது புகாா் அளித்தனா். அப்போது நாகை கடற்பரப்பில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த பூம்புகாா், பழையாா், திருமுல்லைவாசல், சந்திரபாடி ஆகிய கிராமங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினா்.