செய்திகள் :

உலகின் மொத்த பணமும் இருந்திருந்தால் விமானியாக மாறியிருப்பேன்: கிளன் பிலிப்ஸ்

post image

உலகின் மொத்த பணமும் இருந்திருந்தால் விமானியாக மாறியிருப்பேன் என நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கிளன் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான கிளன் பிலிப்ஸ் அவரது பிரம்மிக்க வைக்கும் ஃபீல்டிங் திறமையால் அனைவரது கவனத்தையும் ஈர்க்கக்கூடியவர். கிரிக்கெட் திடலில் அவர் பறந்து பிடிக்கும் பல கேட்ச்சுகள் இணையத்தில் மிகவும் வைரலாவது வழக்கம். அண்மையில் நிறைவடைந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரிலும் தனது சூப்பர் மேன் வித்தைகளை ஃபீல்டிங்கில் காட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இதையும் படிக்க: நான் இம்பாக்ட் பிளேயர் கிடையாது; என்ன சொல்கிறார் எம்.எஸ்.தோனி?

விமானியாக விரும்பிய கிளன் பிலிப்ஸ்

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடவுள்ள கிளன் பிலிப்ஸ், உலகின் மொத்த பணமும் இருந்திருந்தால் விமானியாக மாறியிருப்பேன் எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: விமானியாக வேண்டும் என்பது என்னுடைய மிகப் பெரிய கனவு. என்னுடைய இளமைப் பருவத்தில் நான் கிரிக்கெட் விளையாடாமல் உலகின் மொத்த பணமும் என்னிடம் இருந்திருந்தால், நான் அநேகமாக விமானியாக மாறியிருப்பேன். காற்றில் பறக்க வேண்டும் என்பது எனக்கு மிகவும் பிடிக்கும். விமானியாக கடைபிடிக்கும் அனைத்து விஷயங்கள் மீதும் எனக்கு அதீத ஆர்வம் இருந்தது. எனக்கு ஏன் இந்த அளவுக்கு வானில் பறப்பதற்கு பிடிக்கிறது எனத் தெரியவில்லை. ஆனால், வானில் பறப்பவர்களுக்கும் அவர்களுக்கு ஏன் வானில் பறப்பது அவ்வளவு பிடிக்கிறது எனத் தெரியாது என நினைக்கிறேன்.

இதையும் படிக்க:ருதுராஜ் எடுக்கும் முடிவுகளின் பின்னணியில் நான் இருக்கிறேனா? எம்.எஸ்.தோனி கூறியதென்ன?

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு, மலைகளுக்குச் சென்று எனக்கு பிடித்தமான விஷயங்களை செய்வேன். அதில், முதலாவது தெரிவாக விமானத்தை இயக்குவதே இருக்கும். மற்ற விளையாட்டுகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வது உங்களது பிரதான துறைக்கு உதவியாக இருக்கும். எனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் கோல்ஃப் விளையாடுவேன். கோல்ஃப் விளையாடும்போது, மனம் மிகவும் அமைதியாக இருக்கும். வில்வித்தையில் ஈடுபடுவதும் எனக்கு மிகவும் பிடிக்கும். மற்ற விளையாட்டுகளில் கற்றுக்கொண்ட விஷயங்கள் கிரிக்கெடில் எனக்கு உதவியது என்றார்.

பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட நக்சல்களின் உடல்கள் மீட்பு!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினரின் என்கவுன்டரில் பலியான 3 நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் க... மேலும் பார்க்க

இந்தியா - வங்கதேச எல்லையில் கடத்தப்படும் கால்நடைகள்!

மேற்கு வங்கத்திலுள்ள இந்தியா - வங்கதேசத்தின் எல்லையில் 16 கால்நடைகள் மற்றும் போதைப் பொருள் ஆகியவற்றை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மால்டா மாவட்டத்தின் எல்லைப் புறக்காவல் ... மேலும் பார்க்க

விடியோ பதிவிட்ட பத்திரிக்கையாளருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக விடியோ பதிவிட்ட மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.கராச்சியைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளரும் ரஃப்தார் எனும் டிஜிட்டல... மேலும் பார்க்க

பிரதமர் நரேந்திர மோடியுடன் ‘தினமணி’ ஆசிரியர் கி. வைத்தியநாதன் சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியைத் தினமணி நாளிதழ் ஆசிரியர் கி. வைத்தியநாதன் சந்தித்துப் பேசினார்.தில்லியில் பிரதமரை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை சந்தித்த கி. வைத்தியநாதன், தினமணியின் 90 ஆம் ஆண்டு சிறப்பு மலர் ... மேலும் பார்க்க

பலூசிஸ்தானில் அரசுக்கு எதிராக செயல்படும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை: முதல்வர்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் அரசுக்கு எதிராக செயல்படும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலூசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக செ... மேலும் பார்க்க

ஆப்கனில் பெண் கல்வி மீதான தடை தலைமுறைகளைக் கடந்து பாதிக்கும்: ஐ.நா. கண்டனம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் கல்வி கற்க தலிபான்கள் விதித்துள்ள தடையானது தலைமுறைகளைக் கடந்து பாதிக்கும் என ஐக்கிய நாடுகளின் பெண்கள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் புதிய கல்வியாண்... மேலும் பார்க்க