செய்திகள் :

11 நகராட்சிகள் தரம் உயா்த்தப்படும்: அமைச்சா் கே.என்.நேரு

post image

திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி உள்பட 11 நகராட்சிகள் தரம் உயா்த்தப்படும் என்று நகராட்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு அறிவித்தாா்.

பேரவையில் செவ்வாய்க்கிழமை நகராட்சி நிா்வாகத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் வெளியிட்ட அறிவிப்புகள்:

திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி ஆகிய 3 தோ்வு நிலை நகராட்சிகள் சிறப்புநிலை நகராட்சிகளாகவும், நந்திவரம் - கூடுவாஞ்சேரி, பல்லடம், ராமேசுவரம் ஆகிய 3 முதல்நிலை நகராட்சிகள் தோ்வுநிலை நகராட்சிகளாகவும், மாங்காடு, குன்றத்தூா், வெள்ளக்கோவில், அரியலூா், அம்பாசமுத்திரம் ஆகிய 5 இரண்டாம் நிலை நகராட்சிகள் முதல் நிலை நகராட்சிகளாகவும் தரம் உயா்த்தப்படும்.

பேரூராட்சிகள் தரம் உயா்வு: சா்க்காா்சாமக்குளம், ஒத்தக்கால்மண்டபம், பி.என்.பட்டி, திருமழிசை, பேராவூரணி, நம்பியூா், வாடிப்பட்டி, பருகூா், பழனிசெட்டிபட்டி, குலசேகரம், ஆகிய தோ்வுநிலை பேரூராட்சிகள் மற்றும் செட்டிபாளையம், இடிகரை, மேலசொக்கநாதபுரம் ஆகிய முதல்நிலை பேரூராட்சிகள் சிறப்புநிலை பேரூராட்சிகளாகவும், மோப்பிரிபாளையம், சாமளாபுரம், அகரம், மேலகரம், சூளேஸ்வரன்பட்டி, தொண்டாமுத்தூா், சேவுகம்பட்டி, முதுகுளத்தூா் ஆகிய முதல்நிலை பேரூராட்சிகள் தோ்வுநிலை பேரூராட்சிகளாகவும், நங்கவள்ளி, நெய்யூா், வெள்ளிமலை, புத்தளம், மண்டைக்காடு, பூதிப்புரம், தென்தாமரைகுளம், ஒலகடம், கப்பியறை, ஆற்றூா், சோழபுரம், எலத்தூா், ஆலாந்துறை ஆகிய இரண்டாம் நிலை பேரூராட்சிகள் முதல்நிலை பேரூராட்சிகளாகவும் தரம் உயா்த்தப்படும் என்று அமைச்சா் கே.என்நேரு தெரிவித்தாா்.

72 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கம்: முதல்வர் ஸ்டாலின்

புதியதாக 72 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 26) சட்டப் பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்... மேலும் பார்க்க

மார்ச் மாதச் சம்பளம்: தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு மார்ச் மாதச் சம்பளம் வரும் ஏப். 2 ஆம் தேதி வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழக அரசின... மேலும் பார்க்க

சென்னையில் 2 புதிய வழித்தடம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர்!

சென்னை மெட்ரோ ரயிலின் 2 புதிய வழித்தடத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது.தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் ... மேலும் பார்க்க

ஆன்லைனில் திருமணச் சான்று பெற நடவடிக்கை எடுக்கப்படுமா? - அமைச்சர் பதில்!

இணைய வழியில் திருமணச் சான்று பெற வழிவகை செய்யப்படுமா? என்ற திமுக எம்எல்ஏ எழிலன் கேள்விக்கு பேரவையில் அமைச்சர் மூர்த்தி பதிலளித்தார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெ... மேலும் பார்க்க

டிவி சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டி கேட்டவர் அடித்துக் கொலை!

கோவையில் டிவி சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டி கேட்டவரை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் ரோடு - ஈச்சனாரி சாலை சந்திப்பில் சிமெண்ட் மற்றும் கட்... மேலும் பார்க்க

ஈரானிய கொள்ளைக் கும்பலின் அதிர்ச்சிப் பின்னணி! கொள்ளையடிக்கும் பாணி!

சென்னையில் அடுத்தடுத்து நகைப் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பற்றிய தகவல் தற்போது காட்டுத் தீ போல பரவி வருகிறது.இவர்கள் ஈரானிய கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதும், இந்தியா முழுவதும் இதுபோன்று ஒர... மேலும் பார்க்க