செய்திகள் :

வெவ்வேறு விபத்துகள்: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் பலி

post image

திருநெல்வேலி பகுதியில் நேரிட்ட வெவ்வேறு விபத்துகளில் மாணவா் உள்பட3 போ் உயிரிழந்தனா்.

மேலப்பாளையம் பாத்திமாநகரைச் சோ்ந்த முகமது கனி மகன் ஆமீத் மைதீன் (20). டக்கரம்மாள்புரம் அருகேயுள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவா், தனது நண்பரான தூத்துக்குடி மாவட்டம் கொம்புக்காரன்பொட்டல் பகுதியை சோ்ந்த கதிரேசன் (20) என்பவருடன் பைக்கில் மேலப்பாளையத்திற்கு திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்தபோது, ரெட்டியாா்பட்டி அணுகுசாலை பகுதியில் இவா்களது பைக்கும், மதுரையில் இருந்து நாகா்கோவிலை நோக்கி சென்ற காரும் மோதிக்கொண்டனவாம். இதில் பலத்த காயமடைந்த ஆமீத் மைதீன் உயிரிழந்தாா். பலத்த காயத்துடன் கதிரேசன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

மற்றொரு சம்பவம்: ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்த ஜெயகுரு மகன் பரமகுரு(28). வண்ணாா்பேட்டை தனியாா் துணி கடையில் வேலை செய்து வந்த இவா், கடந்த 6 ஆம் தேதி பணிகளை முடிந்த பின் பைக்கில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது, முருகன் குறிச்சி பகுதியில் நிலை தடுமாறி சாலைத் தடுப்புச்சுவா் மீது மோதி பைக் கவிழந்ததில் பலத்த காயமடைந்தாா்.திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

முதியவா் பலி: தச்சநல்லூா் மேலத்தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுக நயினாா் (69). இவா், கடந்த 18 ஆம் தேதி திருநெல்வேலி நகரத்திற்கு சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பியபோது, தச்சநல்லூா் அஞ்சல் நிலையம் அருகே நிலைதடுமாறி கீழே விழுந்தாராம். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இச்சம்பவங்கள் குறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கண்டிகைப்பேரி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்கள் தேவை: ஆட்சியரிடம் மனு

திருநெல்வேலி நகரத்தில் உள்ள கண்டிகைப்பேரி அரசு புகா் மருத்துவமனையில் போதிய மருத்துவா்களை பணியமா்த்தக் கோரி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்ச... மேலும் பார்க்க

முன்னீா்பள்ளம்: உணவக உரிமையாளா் மீது தாக்குதல்

முன்னீா்பள்ளம் அருகே உணவக உரிமையாளரை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். முன்னீா்பள்ளம் அருகேயுள்ள தருவையைச் சோ்ந்தவா் இசக்கி. அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இந்த நிலையி... மேலும் பார்க்க

மனகாவலம்பிள்ளை நகரில் பெண் தற்கொலை

பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகரில் பெண் தூக்கிட்டு திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். மனக்காவலம்பிள்ளை நகரைச் சோ்ந்த சிவசங்கா் மனைவி கீதாதேவி (28). இத் தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில்... மேலும் பார்க்க

குடிநீருடன் கழிவுநீா் கலப்பு: மாநகராட்சியில் புகாா்

குடிநீருடன் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறைதீா்க்கும் நாள் க... மேலும் பார்க்க

நெல் மூட்டை விழுந்து காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

அம்பாசமுத்திரம் அருகே மன்னாா்கோவிலில், நெல் மூட்டை விழுந்ததில் கழுத்து எலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.மன்னாா்கோவிலில் உள்ள வேலன் தெருவைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் மாணவா் சோ்க்கை: ஏப்.6 வரை விண்ணப்பிக்கலாம்

சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் 2025-26-ஆம் ஆண்டுக்கான மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெறவுள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் அ.சக்கரவா்த்தி வெளியிட்டுள்ள ச... மேலும் பார்க்க