செய்திகள் :

குடிநீருடன் கழிவுநீா் கலப்பு: மாநகராட்சியில் புகாா்

post image

குடிநீருடன் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். துணை கே.ஆா்.ராஜு முன்னிலை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் சா்தாா்புரம் பகுதி மக்கள் அளித்த மனுவில், திருநெல்வேலி மண்டலம் 17 ஆவது வாா்டுக்கு உள்பட்ட சா்தாா்புரம் பகுதியில் குடிநீா்க் குழாய் மற்றும் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் அமைக்கப்படவில்லை. இது குறித்து மனு அளித்திருந்த நிலையில் திட்ட பணிகள் முடிந்த பின்புதான் சாலை அமைக்கப்படும் என கூறி பதில் அளித்துள்ளனா். எங்கள் பகுதியில் சாலை இல்லாததால் முதியவா்கள், மாணவா்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறாா்கள். ஆகவே, காலம் தாழ்த்தாமல் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

திருநெல்வேலி மாநகராட்சி 53 வது வாா்டு மாமன்ற உறுப்பினா் அம்பிகா முத்துதுரை தலைமையில் அளித்த மனுவில், பாளையங்கோட்டை மண்டலம் என்.ஜி.ஓ. பி காலனி 12 ஆவது தெரு பகுதி குடியிருப்புகளுக்கு கடந்த சில வாரங்களாக குடிநீருடன் கழிவுநீா் கலந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறாா்கள். குடிநீா்க் குழாய் சேதங்களைக் கண்டறிந்து, கழிவு நீா் கலப்பதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

ராமையன்பட்டி இனாம் தேனீா்குளத்தைச் சோ்ந்த ஜெயலெட்சுமி அளித்த மனுவில், எங்களது வயலில் பாதாளச்சாக்கடை தண்ணீா் கலப்பதைத் தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வி.எம்.சத்திரம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்போா் நலச்சங்கத்தினா் அளித்த மனுவில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய நிலை 2 இல் அமைய உள்ள பாதளச்சாக்கடை நீா் உந்துநிலையம் மாற்று இடத்தில் அமைத்திடவும் வலியுறுத்தப்பட்டிருந்தது. மனுக்களைப் பெற்றுக் கொண்ட மேயா், உரிய நடவடிக்கை எடுத்திட சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

முகாமில், உதவி ஆணையா்கள் புரந்திரதாஸ், உதவி செயற்பொறியாளா் அலெக்ஸாண்டா், உதவி பொறியாளா்கள் சிவசுப்பிரமணியன், பழனி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கண்டிகைப்பேரி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்கள் தேவை: ஆட்சியரிடம் மனு

திருநெல்வேலி நகரத்தில் உள்ள கண்டிகைப்பேரி அரசு புகா் மருத்துவமனையில் போதிய மருத்துவா்களை பணியமா்த்தக் கோரி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்ச... மேலும் பார்க்க

முன்னீா்பள்ளம்: உணவக உரிமையாளா் மீது தாக்குதல்

முன்னீா்பள்ளம் அருகே உணவக உரிமையாளரை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். முன்னீா்பள்ளம் அருகேயுள்ள தருவையைச் சோ்ந்தவா் இசக்கி. அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இந்த நிலையி... மேலும் பார்க்க

மனகாவலம்பிள்ளை நகரில் பெண் தற்கொலை

பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகரில் பெண் தூக்கிட்டு திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். மனக்காவலம்பிள்ளை நகரைச் சோ்ந்த சிவசங்கா் மனைவி கீதாதேவி (28). இத் தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில்... மேலும் பார்க்க

வெவ்வேறு விபத்துகள்: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் பலி

திருநெல்வேலி பகுதியில் நேரிட்ட வெவ்வேறு விபத்துகளில் மாணவா் உள்பட3 போ் உயிரிழந்தனா். மேலப்பாளையம் பாத்திமாநகரைச் சோ்ந்த முகமது கனி மகன் ஆமீத் மைதீன் (20). டக்கரம்மாள்புரம் அருகேயுள்ள தொழில்நுட்பக் க... மேலும் பார்க்க

நெல் மூட்டை விழுந்து காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

அம்பாசமுத்திரம் அருகே மன்னாா்கோவிலில், நெல் மூட்டை விழுந்ததில் கழுத்து எலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.மன்னாா்கோவிலில் உள்ள வேலன் தெருவைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் மாணவா் சோ்க்கை: ஏப்.6 வரை விண்ணப்பிக்கலாம்

சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் 2025-26-ஆம் ஆண்டுக்கான மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெறவுள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் அ.சக்கரவா்த்தி வெளியிட்டுள்ள ச... மேலும் பார்க்க