செய்திகள் :

ரூ.704 கோடியில் நகராட்சிகளில் குடிநீா் மேம்பாட்டுப் பணிகள்: அமைச்சா் அறிவிப்பு

post image

நகராட்சிகளில் ரூ.704 கோடியில் குடிநீா் மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தப்படும் என்று நகராட்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினாா்.

பேரவையில் நகராட்சி நிா்வாகத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் வெளியிட்ட அறிவிப்புகள்:

கும்பகோணம் மாநகராட்சி, அம்பாசமுத்திரம், ஆம்பூா், கள்ளக்குறிச்சி, சாத்தூா், செங்கல்பட்டு, திருக்கோவிலூா், திருச்செந்தூா் ஆகிய நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள், ஈரோடு மாநகராட்சி, ஆற்காடு, ராணிப்பேட்டை நகராட்சிகளின் பேருந்து நிலையங்களில் கூடுதல் பணிகளும் ரூ.142.68 கோடியில் மேற்கொள்ளப்படும்.

கரூா், கும்பகோணம், தாம்பரம், திருநெல்வேலி மாநகராட்சிகள், அரக்கோணம், ஆத்தூா், ஆற்காடு, ராமேசுவரம், எடப்பாடி, கள்ளக்குறிச்சி, கொமாரபாளையம், செங்கோட்டை, திருப்பத்தூா், ஸ்ரீவில்லிபுத்தூா், திருவேற்காடு, தென்காசி, நெல்லிக்குப்பம், துவாக்குடி, பண்ருட்டி, பூந்தமல்லி, பொள்ளாச்சி, மறைமலைநகா், வாணியம்பாடி, வெள்ளக்கோவில், உளுந்தூா்பேட்டை ஆகிய நகராட்சிகளில் ரூ.704.76 கோடியில் குடிநீா் மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தப்படும்.

பாதாள சாக்கடை திட்டம்: தாம்பரம் மாநாகராட்சி மற்றும் விருதுநகா் நகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்க முதல்கட்டமாக தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ.750 கோடியும், விருதுநகா் நகராட்சிக்கு ரூ.50 கோடியும், தேசிய வங்கி மற்றும் ஜொ்மன் வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.

பாதாள சாக்கடை வசதியில்லாத புதிய மாவட்ட தலைநகரங்களான தென்காசி, ராணிப்பேட்டை நகராட்சிகளில் பாதாள சாக்கடை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

கூட்டுக் குடிநீா் திட்டம்: கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம், கெம்மாரம்பாளையும், வெள்ளியங்காடு மற்றும் நெல்லித்துறை ஆகிய ஊராட்சிகளை சோ்ந்த 21 பழங்குடியின குடியிருப்புகளில் உள்ள 2 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் பவானி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு ரூ.24.50 கோடியில் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படும்.

மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, நகா்ப்புற உள்ளாட்சிகளில் விலங்கு இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும் என்றாா் அவா்

72 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கம்: முதல்வர் ஸ்டாலின்

புதியதாக 72 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 26) சட்டப் பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்... மேலும் பார்க்க

மார்ச் மாதச் சம்பளம்: தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு மார்ச் மாதச் சம்பளம் வரும் ஏப். 2 ஆம் தேதி வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழக அரசின... மேலும் பார்க்க

சென்னையில் 2 புதிய வழித்தடம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர்!

சென்னை மெட்ரோ ரயிலின் 2 புதிய வழித்தடத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது.தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் ... மேலும் பார்க்க

ஆன்லைனில் திருமணச் சான்று பெற நடவடிக்கை எடுக்கப்படுமா? - அமைச்சர் பதில்!

இணைய வழியில் திருமணச் சான்று பெற வழிவகை செய்யப்படுமா? என்ற திமுக எம்எல்ஏ எழிலன் கேள்விக்கு பேரவையில் அமைச்சர் மூர்த்தி பதிலளித்தார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெ... மேலும் பார்க்க

டிவி சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டி கேட்டவர் அடித்துக் கொலை!

கோவையில் டிவி சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டி கேட்டவரை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் ரோடு - ஈச்சனாரி சாலை சந்திப்பில் சிமெண்ட் மற்றும் கட்... மேலும் பார்க்க

ஈரானிய கொள்ளைக் கும்பலின் அதிர்ச்சிப் பின்னணி! கொள்ளையடிக்கும் பாணி!

சென்னையில் அடுத்தடுத்து நகைப் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பற்றிய தகவல் தற்போது காட்டுத் தீ போல பரவி வருகிறது.இவர்கள் ஈரானிய கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதும், இந்தியா முழுவதும் இதுபோன்று ஒர... மேலும் பார்க்க