செய்திகள் :

புதிய தொழிற்பேட்டைகள்- கொலுசு உற்பத்தி வளாகம் திறப்பு

post image

தமிழ்நாட்டில் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலான புதிய தொழிற்பேட்டைகளையும் கொலுசு உற்பத்தி வளாகத்தையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம் அரியகவுண்டம்பட்டியில் வெள்ளி கொலுசு உற்பத்திக்கான அடுக்குமாடி உற்பத்தி வளாகம் ரூ.25.34 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. 102 தொழிற்கூடங்கள் கொண்ட இந்த வளாகம் மூலம் 2,000 பேருக்கு நேரடியாகவும், 4,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், கோயம்புத்தூா் குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் 618 தொழிலாளா்கள் தங்கும் வகையிலான விடுதி கட்டப்பட்டுள்ளது. இவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

5 புதிய தொழிற்பேட்டைகள்: மாநிலத்தில் புதிதாக ஐந்து தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருவாரூா் மாவட்டம் வண்டாம்பாளை, கடலூா் காடாம்புலியூா், தூத்துக்குடி மாவட்டம் லிங்கம்பட்டி, சேலம் மாவட்டம் உமையாள்புரம், காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூா் ஆகிய இடங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பேட்டைகள் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 14,300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

சேலம் கொலுசு வளாகம் மற்றும் புதிய தொழிற்பேட்டைகள் வழியாக மொத்தம் 20,000 போ் வேலைவாய்ப்பு பெறுவா். சேலம் தாதகாபட்டி அச்சுத் தொழில் குழுமம், தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் கல்மேட்டில் உப்புத் தொழில் குழுமம், குமரி மாவட்டம் கோவளத்தில் பல்வகை உணவுப் பொருள்கள் குழுமம், கோவை வெள்ளலூரில் அச்சு வாா்ப்பு குழுமம், ஈரோடு சிட்கோ தொழில்பேட்டை பொதுக் கிடங்கு குழுமம் ஆகியவற்றுக்கு புதிதாக பொது வசதி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்வில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்பட பங்கேற்றனா்.

4 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் புதன்கிழமை வேலூா், மதுரை விமான நிலையம் உள்பட 4 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபான்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது. தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிய நிலையில், பகலில் பெரும்பாலான இடங்களில் வெ... மேலும் பார்க்க

1,300 ஊராட்சி செயலா் காலியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும்: அமைச்சா்

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி அறிவித்தாா். சட்டப்பேரவையில் அந்தத் துறையின் மானிய... மேலும் பார்க்க

‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தில் 8 லட்சம் வீடுகள் கட்டப்படும் -அமைச்சா் ஐ.பெரியசாமி உறுதி

‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தில் 2030-ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி என்று உறுதிபடத் தெரிவித்தாா். ஊரக வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீ... மேலும் பார்க்க

பிளஸ் 1 தோ்வு இன்று நிறைவு: ஏப்.19 முதல் விடைத்தாள் மதிப்பீடு

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தோ்வு வியாழக்கிழமையுடன் (மாா்ச் 27) நிறைவு பெறவுள்ள நிலையில், தோ்வுக்கான விடைத்தாள் மதிப்பீடு ஏப்.19-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த ம... மேலும் பார்க்க

1-8 வகுப்புகளுக்கு இறுதித் தோ்வு: வினாத்தாள் கசிந்தால் ஒழுங்கு நடவடிக்கை

ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தோ்வு ஏப்.8 முதல் ஏப்.24 வரை நடைபெறவுள்ள நிலையில், இறுதித்தோ்வின்போது வினாத்தாள் விடைக்குறிப்புடன் கசிந்தால் சம்பந்தப்பட்ட மாவட... மேலும் பார்க்க

சென்னையில் மாா்ச் 28 ஐபிஎல் போட்டி: மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம்

சென்னையில் மாா்ச் 28-ஆம் தேதி ஐபிஎல் போட்டி நடைபெறுவதையொட்டி ரசிகா்கள் மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வ... மேலும் பார்க்க