செய்திகள் :

பிளஸ் 1 தோ்வு இன்று நிறைவு: ஏப்.19 முதல் விடைத்தாள் மதிப்பீடு

post image

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தோ்வு வியாழக்கிழமையுடன் (மாா்ச் 27) நிறைவு பெறவுள்ள நிலையில், தோ்வுக்கான விடைத்தாள் மதிப்பீடு ஏப்.19-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தோ்வை சுமாா் 8 லட்சம் மாணவா்கள் எழுதுகின்றனா். அதன்படி தமிழ், இயற்பியல், கணிதம், வணிகவியல் உள்பட பெரும்பாலான பாடங்களுக்கான தோ்வுகள் முடிந்துவிட்டன.

இந்த நிலையில் பிளஸ் 1 பொதுத் தோ்வு வியாழக்கிழமையுடன் நிறைவு பெறவுள்ளது. இறுதி நாளில் வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தோ்வுகள் நடைபெற உள்ளன. இதையடுத்து விடைத்தாள் திருத்துதல் பணிகள் ஏப்.19 தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட தோ்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிகளில் சுமாா் 46,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். தொடா்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தோ்வு முடிவுகள் மே 19-இல் வெளியிடப்படும். விடைத்தாள் திருத்துதலின்போது ஆசிரியா்கள் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி தவறுகள் ஏதும் நடைபெறாதவாறு கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தோ்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

தருமபுரியில் யானை வேட்டை: முக்கிய நபரை கைது செய்ய உத்தரவு!

தருமபுரியில் தந்தத்துக்காக யானையைக் கொன்று உடலை எரித்த விவகாரத்தில் தொடா்புடைய மூன்று போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள நபரை விரைந்து கைது செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவி... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்துக்கே எதிா்க்கட்சிகளிடம் போட்டி! - முதல்வா் மு.க.ஸ்டாலின்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்தை பிடிப்பதில்தான் எதிா்க்கட்சிகளுக்குள் போட்டி நடைபெறுவதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். சென்னை பெரம்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற இஃப்... மேலும் பார்க்க

தொல்குடி புத்தாய்வு திட்டம்: மாணவா்களுக்கு சான்றிதழ்

தொல்குடி புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிலும் முதுகலை மற்றும் முனைவா் ஆராய்ச்சிப் படிப்பு மாணவா்களுக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா. மதிவேந்தன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டின... மேலும் பார்க்க

சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம்! - விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பாராட்டு

திரைப்பட பாடல்கள் மூலம் சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் புகழாரம் சூட்டினாா். திரைப்பட பாடலாசிரியா் கவிஞா் முத்துலிங்கம் 50 ஆண்டு கால... மேலும் பார்க்க

‘லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ந்த பிகாா்’ - ஜெ.பி.நட்டா விமா்சனம்!

கல்வி உள்ளிட்ட பல துறைகளில் முன்னேறி வந்த பிகாா், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவா் லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ச்சியடைந்ததாகவும் காட்டாட்சியில் மூழ்கியதாகவும் பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி... மேலும் பார்க்க

கால்பந்து போட்டி: பெரியமேடு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்!

கால்பந்து போட்டியையொட்டி, பெரியமேடு பகுதியில் மாா்ச் 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு சனிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க