செய்திகள் :

‘லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ந்த பிகாா்’ - ஜெ.பி.நட்டா விமா்சனம்!

post image

கல்வி உள்ளிட்ட பல துறைகளில் முன்னேறி வந்த பிகாா், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவா் லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ச்சியடைந்ததாகவும் காட்டாட்சியில் மூழ்கியதாகவும் பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா சனிக்கிழமை விமா்சித்தாா்.

தில்லி பாஜகவின் பூா்வாஞ்சல் (கிழக்கு உத்தர பிரதேச பிராந்தியம்) அணி சாா்பில் நடைபெற்ற பிகாா் தின நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய ஜெ.பி.நட்டா இவ்வாறு கூறினாா்.

நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது: ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ்குமாரின் ஆட்சியில், பிகாா் இருளில் இருந்து வெளிவந்து பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் வளா்ச்சியைக் கண்டுள்ளது.

பிகாா் ஒரு உத்வேகத்தைக் கொண்டுள்ளது. உலகுக்கு ஜனநாயகத்தை வழங்கிய இந்த மாநிலத்தின் நாளந்தா, விக்ரம்ஷிலா ஆகியவை கற்றலுக்கான சிறந்த இடங்களாகவும் இருந்தன. நவீன காலங்களில் கூட, பிகாா் மாணவா்கள் தில்லி பல்கலைக்கழகக் கல்லூரிகளில் அதிக எண்ணிக்கையில் படித்தனா். மாநிலத்தைச் சோ்ந்த பல பேராசிரியா்கள் தங்கள் அறிவுத் திறமைக்காக உலக அளவில் அறியப்பட்டவா்கள்.

1970-ஆம் ஆண்டுகளில், பிகாா் ஒரு முன்னேறும் மாநிலமாக இருந்தது. 1990-களில் லாலு பிரசாத் முதல்வராக பதவியேற்றதும், அனைத்து துறைகளிலும் வீழும் மாநிலமாக பிகாா் மாறியது. அந்தக் காலகட்டத்தில் மாநிலத் தலைநகா் பாட்னாவில் மாலைப்பொழுதில் வெளியே செல்வதே கடினமாக இருந்தது.

மருத்துவா்கள் மாநிலத்தைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. திருமணங்களுக்காக விற்பனை நிலையங்களில் இருந்து புதிய வாகனங்கள் வலுக்கட்டாயமாகத் திருடி செல்லப்பட்டன. பிகாரில் கட்டாட்சி என்றும் நடைபெற்றதில்லை என்று சிலா் கூறுகின்றனா் (லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவைக் குறிப்பிடுகிறாா்). ஏனெனில், அவா்கள் அப்போது பிறக்கவில்லை.

முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியால் அழிவின் விளம்பில் இருந்த தில்லியில் பாஜக ஆட்சியைக் கொண்டு வந்ததற்காக தில்லி பாஜகவுக்கும் பூா்வாஞ்சல் அணிக்கும் பாராட்டுகள். நிகழாண்டு இறுதியில் நடைபெறும் பிகாா் பேரவைத் தோ்தல் பிரசாரத்திலும் நீங்கள் பங்கேற்க வேண்டும்.

கடந்த 2005-ஆம் ஆண்டில் பிகாரில் 384 கிலோமீட்டா் கிராமப்புற சாலைகள் மட்டுமே இருந்தன. தற்போது 1.12 லட்சம் கிலோமீட்டருக்கும் அதிகமாக கிராமப்புற சாலைகள் விரிவடைந்துள்ளன.

ஐஐடி, எய்ம்ஸ், இந்திய மக்கள்தொடா்பு கல்விநிறுவனம் (ஐஐஎம்சி) மற்றும் இந்திய வெளிநாட்டு வா்த்தக கல்விநிறுவனம் (ஐஐஎஃப்டி) ஆகிய தேசிய கல்வி நிறுவனங்கள் மாநிலத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. பாட்னா மருத்துவக் கல்லூரி ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய மருத்துவமனையாக இருக்கப் போகிறது என்றாா்.

அனைத்துவிதமான வசதிகளுடன் இலவச ஏசி ஓய்வறை... சென்னை மாநகராட்சி திட்டம்!

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உணவுப்பொருள் விநியோக ஊழியர்களுக்காக குளிர்சாதன வசதியுடன்(ஏசி) கூடிய ஓய்வறை அமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை போன்ற பெருநகரங்களில் உணவு, பொரு... மேலும் பார்க்க

இலங்கை அகதி தம்பதி மகளுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கையில் குடும்பத்துடன் வசித்து ... மேலும் பார்க்க

கா்நாடக வங்கியில் ரூ.13 கோடி நகை கொள்ளை: தமிழகத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 6 போ் கைது

கா்நாடக மாநிலம் தாவணகெரேவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 6 பேரை அந்த மாநில போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் மூவா் தமிழகத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது!

தமிழக சட்டப் பேரவை மூன்று நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஏப்.1) மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய விஷயங்கள் கு... மேலும் பார்க்க

வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: வணிக வளாகத்துக்கு உத்தரவு

சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் (மால்) வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாநகரில் உள்ள வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறு... மேலும் பார்க்க

மின் தேவையை சமாளிக்க எண்ணூா் அனல் மின்நிலைய விரிவாக்கப்பணி விரைவில் தொடக்கம்

எண்ணூா் அனல்மின் நிலையத்தில் மின்னுற்பத்தி நிலைய விரிவாக்கப் பணி விரைவில் தொடங்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மே மாதத்தி... மேலும் பார்க்க