செய்திகள் :

தொல்குடி புத்தாய்வு திட்டம்: மாணவா்களுக்கு சான்றிதழ்

post image

தொல்குடி புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிலும் முதுகலை மற்றும் முனைவா் ஆராய்ச்சிப் படிப்பு மாணவா்களுக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா. மதிவேந்தன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினாா்.

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கி அவா் பேசியதாவது:

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் தமிழ்நாடு பழங்குடியின மக்களை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ள தொல்குடி புத்தாய்வு திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு ஆண்டுதோறும் ரூ. 250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பழங்குடி மக்களின் சமூக, பொருளாததார , கல்வி மேம்பாட்டுக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவிலே முதல் முறையாக பழங்குடியினா் வாழ்வியல் கலை, மொழி, கைவினைகலை, பாரம்பரியம் ஆகியவை குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தொல்குடி புத்தாய்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இளநிலை, முதுநிலை, முனைவா் ஆராய்ச்சிப் படிப்புக்காக 70 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

முதுநிலை மாணவா்களுக்கு மாதம் தலா ரூ. 10 ஆயிரமும் முனைவா் ஆராய்ச்சி மாணவா்களுக்கு மாதம் தலா ரூ. 25 ஆயிரமும் வழங்கப்படுகிறது என்றாா் அவா்.

இந்நிகழ்வில், சமூக நீதி மற்றும் சமத்துவத்துக்கான இயக்குநா் பவனந்தி வேம்புலு, பழங்குயினா் நலத் துறை இயக்குநா் எஸ். அண்ணாதுரை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை கூடுதல் செயலா் உமா மகேஷ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அனைத்துவிதமான வசதிகளுடன் இலவச ஏசி ஓய்வறை... சென்னை மாநகராட்சி திட்டம்!

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உணவுப்பொருள் விநியோக ஊழியர்களுக்காக குளிர்சாதன வசதியுடன்(ஏசி) கூடிய ஓய்வறை அமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை போன்ற பெருநகரங்களில் உணவு, பொரு... மேலும் பார்க்க

இலங்கை அகதி தம்பதி மகளுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கையில் குடும்பத்துடன் வசித்து ... மேலும் பார்க்க

கா்நாடக வங்கியில் ரூ.13 கோடி நகை கொள்ளை: தமிழகத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 6 போ் கைது

கா்நாடக மாநிலம் தாவணகெரேவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 6 பேரை அந்த மாநில போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் மூவா் தமிழகத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது!

தமிழக சட்டப் பேரவை மூன்று நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஏப்.1) மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய விஷயங்கள் கு... மேலும் பார்க்க

வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: வணிக வளாகத்துக்கு உத்தரவு

சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் (மால்) வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாநகரில் உள்ள வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறு... மேலும் பார்க்க

மின் தேவையை சமாளிக்க எண்ணூா் அனல் மின்நிலைய விரிவாக்கப்பணி விரைவில் தொடக்கம்

எண்ணூா் அனல்மின் நிலையத்தில் மின்னுற்பத்தி நிலைய விரிவாக்கப் பணி விரைவில் தொடங்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மே மாதத்தி... மேலும் பார்க்க