செய்திகள் :

ஊட்டி: காட்டுக்குள் கிடந்த மனித காது; பின் தொடர்ந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி - என்ன நடந்தது?

post image

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகில் உள்ள கவர்னர் சோலை பகுதி தோடர் பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர், கேந்தர் குட்டன்‌. 40 வயதான இவர் நேற்று மாலை முதல் திடீரென காணாமல் போன நிலையில், கிராம மக்கள் அவரை தேடி அலைந்துள்ளனர். இரவு நீண்ட நேரமாக தேடியும் கேந்தர் குட்டனை கண்டறிய முடியவில்லை என்பதால், அருகில் உள்ள வனப்பகுதியில் இன்று காலை மீண்டும் தேடச் சென்றுள்ளனர். காட்டுக்குள் மனித காது ஒன்று துண்டித்து கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் அருகிலியே உடலை இழுத்துச் சென்றதற்கான தடயம் தென்பட்டிருக்கிறது.

புலி தாக்குதல்

அந்த தடத்தைப் பின்தொடர்ந்து சென்ற நிலையில் சில மீட்டர்கள் தொலைவில் கேந்தர் குட்டனின் பாதி உடல் கிடப்பதைக் கண்டு அச்சத்தில் உறைந்துள்ளனர். காவல்துறை மற்றும் வனத்துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த பகுதிக்குச் சென்று கேந்தர் குட்டனின் உடலை மீட்ட அரசுத் துறையினர் , புலியால் தாக்கி கொல்லப்பட்டு பாதி உடல் உண்ணப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பின்னணி குறித்து தெரிவித்த வனத்துறையினர், "விறகு சேகரிக்க காட்டுக்குள் வந்த நபரை புலி தாக்கியிருக்கக் கூடும். அவர் உடலின் கை, மார்பு உள்ளிட்ட சில பகுதிகளைத் தவிர மற்ற பாகங்களைத் தின்றிருக்கிறது. வயது முதிர்வு அல்லது வேட்டைத்திறன் இழப்பு காரணமாக மனித வேட்டையில் அந்த புலி ஈடுபட்டிருக்கலாம். குறிப்பிட்ட அந்த புலியின் நடமாட்டத்தைக் கண்டறிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

புலி தாக்குதல்

சில கோரிக்கைகளை வலியுறுத்தி உடலை வாங்க மறுப்பதாக கூறினர். அது குறித்தும் பரிசீலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது ‌. இழப்பீடு வழங்கவும் வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எதிர்கொள்ளல் நடந்த சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறோம்" என்றனர்.

"தன்னுடன் பேச மறுத்ததால் உயிரோடு தீ வைத்த காதலன்" - சிகிச்சை பலனின்றி இளம்பெண் உயிரிழந்த பரிதாபம்!

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி காளியம்மாள். கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் தனது கணவரை பிரிந்து தனது 2 மகன்கள் மற்றும் மகளுடன... மேலும் பார்க்க

காவலர் கொலையில் 3 பேர் சிறையில் அடைப்பு; சுடப்பட்ட குற்றவாளிக்குத் தீவிர சிகிச்சை

உசிலம்பட்டியில் போலீஸ்காரர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேரைக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.சுடப்பட்ட பொன்வண்ணன்மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்... மேலும் பார்க்க

வீட்டில் ஸ்டூடியோ; மாடல்களுக்கு லட்சத்தில் சம்பளம்; ஆபாச வீடியோ நெட்வொர்க்கை இயக்கிய நொய்டா தம்பதி!

உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் சட்டவிரோதமாக ஆன்லைனில் ஆபாச வீடியோ வெளியிடப்படுவதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நொய்டாவில் உள்ள உஜ்வால் என்பவரத... மேலும் பார்க்க

உசிலம்பட்டி போலீஸ் கொலை வழக்கு: கேரளா தப்ப முயன்ற ரௌடி சுட்டுப் பிடித்த போலீஸார் - நடந்தது என்ன?

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் தலைமைக் காவலர் முத்துக்குமார் (40). இவர் கடந்த 2009-ல் காவல்துறையில் பணிக்கு சேர்ந்து, தற்போது உசிலம்பட்டி காவல் ஆய்வாளருக்கு டிரைவராக பணிய... மேலும் பார்க்க

பிரபல ரௌடி அசோக்கைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்.. செங்கல்பட்டு வனப்பகுதியில் நடந்ததென்ன?

செங்கல்பட்டு அருகே உள்ள திருப்போரூர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் (30). இவர் ஏ பிளஸ் ரௌடி. சிறையிலிருந்து வெளியில் வந்த அசோக்கை போலீஸார் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அசோக் தலைமையிலான ரௌடி டீம், தி.மு... மேலும் பார்க்க

சென்னை: மருத்துவ மாணவிக்குப் பாலியல் தொல்லை - மாணவனைத் தேடும் போலீஸ்!

சென்னையில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் எம்.டி.எஸ் 2-ம் ஆண்டு படித்து வருகிறார் 26 வயது மாணவி ஒருவர். இவர் கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், அதே கல்லூரியில் படி... மேலும் பார்க்க