செய்திகள் :

ஒடிசாவில் 5 ஆண்டுகளில் மின்னல் பாய்ந்து 1,418 பேர் பலி!

post image

ஒடிசா மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மின்னல் பாய்ந்து 1,418 பேர் பலியாகியுள்ளனர்.

ஒடிசாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2025 வரையிலான 5 ஆண்டுகளில் மின்னல் பாய்ந்து 1,418 பேர் பலியானதாக அம்மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சுரேஷ் புஜாரி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 2020-21 வரையிலான காலத்தில் 339 பேரும், 2021-22 இல் 296 பேரும், 2022-23 இல் 306 பேரும், 2023-24 இல் 272 பேரும் மற்றும் 2024-25 இல் 205 பேரும் மின்னல் பாய்ந்து பலியானதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், ஒடிசா மாநிலத்தில் அதிகப்படியாக மின்னல் பாய்ந்து பலியானவர்களில் மயூர்பஞ்ச் மாவட்டம் -134(பலி எண்ணிக்கை) முதலிடத்திலும் அதற்கு அடுத்தப்படியாக பாலாசோர்-110, கஞ்சம்-104 மற்றும் கியோஜார்-100 ஆகிய மாவட்டங்கள் உள்ளதென பலி எண்ணிக்கை பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார். மேலும், அம்மாநிலத்தின் பௌத் மாவட்டம்-11 கடைசி இடத்திலுள்ளது.

இந்நிலையில், இயற்கையாகவே பனை மரங்கள் மின்னலைக் கடத்தி மக்களைக் காப்பாற்றக் கூடும் என்பதினால் 23 லட்சம் பனை மரங்களை ஒடிசா மாநிலம் முழுவதும் நடுவதற்காக வனத் துறைக்கு ரூ.7.59 கோடி ஒதுக்கப்பட்டதாகவும் அதில் 51 வனப்பகுதி மண்டலங்களில் தற்போது 19 லட்சம் பனை மரங்கள் நடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2015 ஆம் ஆண்டு ஒடிசா மாநில அரசு மின்னலை மாநிலத்தின் பேரிடராக அறிவித்திருந்தது.

மாநில பேரிடர் மீட்பு நிதி வழிகாட்டுதலின் படி மின்னல் பாய்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடாக தலா ரூ.4 லட்சம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பிரிட்டன் - இந்திய கூட்டுத் தயாரிப்பில் உருவான படத்தை வெளியிட தணிக்கை வாரியம் தடை!

7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு: அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி,கன்னியாகுமரி,போளூர், செங்கம், சங்ககிரி, கோத்தகிரி, அவினாசி, பெருந்துறை ஆகிய 7 ... மேலும் பார்க்க

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி ஓட்டு கேட்க முடியாது! - துரைமுருகன்

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி யாரும் இங்கு வாக்கு சேகரிக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய ரூ. 4,034 கோடியை ... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

மியான்மர், தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்குள்ள தமிழர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவி தேவைப்படுவோர் - 1800 309 3793+91 80690 099... மேலும் பார்க்க

சமூக நீதியை நிலைநாட்டும் அரசு! - ஆதி திராவிடர், பழங்குடியினர் நலக் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனை மேம்படுத்தும் பொருட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல... மேலும் பார்க்க

தென் கொரிய காட்டுத் தீ: நெருப்பில் சடங்கு செய்த நபர் காரணமா?

தென் கொரியாவில் காட்டுத் தீ ஏற்படக் காரணம் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தென் கொரியாவின் மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காட்டுத... மேலும் பார்க்க

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்!

லெபனான் நாட்டு தலைநகரின் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் கடைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில் த... மேலும் பார்க்க