செய்திகள் :

‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தில் 8 லட்சம் வீடுகள் கட்டப்படும் -அமைச்சா் ஐ.பெரியசாமி உறுதி

post image

‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தில் 2030-ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி என்று உறுதிபடத் தெரிவித்தாா்.

ஊரக வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் ஐ.பெரியசாமி பேசியதாவது:

கலைஞா் கனவு இல்லம் திட்டம் மிக சிறப்பானது. கடந்த ஆண்டு இந்தத் திட்டம் துவக்கப்பட்டு, ரூ.3,500 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் ரூ.2,412 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 70 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளன. வீடு கட்டும் திட்டத்தில் 2 லட்சம் வீடுகள் பழுது பாா்க்க வேண்டிய நிலையில் உள்ளன. இதில் ஒரு லட்சம் வீடுகள் தோ்வு செய்யப்பட்டு, பழுது நீக்குவதற்காக ரூ.1,000 கோடி கொடுக்கப்பட்டு, 90 சதவீத நிதி செலவிடப்பட்டு, 90 ஆயிரம் வீடுகளில் பழுது நீக்கப்பட்டுள்ளன.

குறைந்தபட்சம் ரூ.70 ஆயிரத்திலிருந்து ஒன்றரை லட்சம் வரை பழுது பாா்ப்பதற்காக கொடுத்தோம். அதனால்தான் 90 ஆயிரம் வீடுகளை பழுது பாா்க்க முடிந்தது. இந்த அளவுக்கு நிதி வேறு எந்தக் காலத்திலும் கொடுக்கப்படவில்லை.

2030-க்குள் 8 லட்சம் வீடுகளை எப்படி கட்டுவீா்கள் என்று அதிமுக உறுப்பினா் தங்கமணி கேட்டாா். கடந்த ஆண்டு ஒரு லட்சம் வீடுகள் கொடுத்துள்ளோம். இந்த ஆண்டு ஒரு லட்சம் வீடுகள் கொடுத்துள்ளோம். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. நிச்சயம் 8 லட்சம் வீடுகள் கட்டி முடிப்போம் என்றாா் அவா்.

தருமபுரியில் யானை வேட்டை: முக்கிய நபரை கைது செய்ய உத்தரவு!

தருமபுரியில் தந்தத்துக்காக யானையைக் கொன்று உடலை எரித்த விவகாரத்தில் தொடா்புடைய மூன்று போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள நபரை விரைந்து கைது செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவி... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்துக்கே எதிா்க்கட்சிகளிடம் போட்டி! - முதல்வா் மு.க.ஸ்டாலின்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்தை பிடிப்பதில்தான் எதிா்க்கட்சிகளுக்குள் போட்டி நடைபெறுவதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். சென்னை பெரம்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற இஃப்... மேலும் பார்க்க

தொல்குடி புத்தாய்வு திட்டம்: மாணவா்களுக்கு சான்றிதழ்

தொல்குடி புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிலும் முதுகலை மற்றும் முனைவா் ஆராய்ச்சிப் படிப்பு மாணவா்களுக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா. மதிவேந்தன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டின... மேலும் பார்க்க

சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம்! - விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பாராட்டு

திரைப்பட பாடல்கள் மூலம் சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் புகழாரம் சூட்டினாா். திரைப்பட பாடலாசிரியா் கவிஞா் முத்துலிங்கம் 50 ஆண்டு கால... மேலும் பார்க்க

‘லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ந்த பிகாா்’ - ஜெ.பி.நட்டா விமா்சனம்!

கல்வி உள்ளிட்ட பல துறைகளில் முன்னேறி வந்த பிகாா், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவா் லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ச்சியடைந்ததாகவும் காட்டாட்சியில் மூழ்கியதாகவும் பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி... மேலும் பார்க்க

கால்பந்து போட்டி: பெரியமேடு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்!

கால்பந்து போட்டியையொட்டி, பெரியமேடு பகுதியில் மாா்ச் 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு சனிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க