ரூ.1.72 லட்சத்துக்கு சிக்கந்தர் பட டிக்கெட்! அதிர்ச்சி அளிக்கும் சல்மான் கான் ரச...
சிஎஸ்கேவுக்கு எதிரான 17 ஆண்டு சோகத்தை மாற்றுமா ஆர்சிபி?
18-ஆவது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச்.22-இல் தொடங்கியது. இதில் ஆர்சிபி தனது முதல் போட்டியில் கேகேஆர் அணியை வென்றது.
சிஎஸ்கே அணி மும்பையை கடைசி ஓவரில் வென்றது. அடுத்ததாக சிஎஸ்கே, ஆர்சிபி அணி வரும் மார்ச்.28ஆம் தேதி மோதவிருக்கிறது.
சேப்பாக்கில் ஐபிஎல் தொடங்கிய ஆண்டு மட்டுமே சிஎஸ்கேவை ஆர்சிபி தோற்கடித்துள்ளது.
தற்போது, 17 ஆண்டுகளாக தோல்வியில் இருக்கும் ஆர்சிபி சிஎஸ்கேவை வீழ்த்துமா என அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
சிஎஸ்கே சுழலை சமாளிக்குமா ஆர்சிபி?
2008இல் விளையாடிய வீரர்களில் தற்போதைய ஆர்சிபி அணியில் விராட் கோலி மட்டுமே இருக்கிறார்.
சிஎஸ்கே அணியில் ஜடேஜா, அஸ்வின், நூர் அஹ்மது என ஸ்பின் டிரையோ இருக்கிறார்கள்.
ஆப்கன் வீரர் நூர் அஹமது முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
இந்த மூவர்கள் 11 ஓவர்களில் 70 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
ஆர்சிபி பேட்டர்கள் கோலிக்கு உதவ வேண்டும்
சேப்பாக்கம் பிட்ச்சுக்கு ஏற்றமாதிட்ரி ஆர்சிபி அணியில் மாற்றம் வேண்டுமென வாட்சன் கூறியிருந்தார்.
கோலி ம்ட்டுமே விளையாடினால் போதாது. சால்ட், கேப்டன் படிதார், லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மாவும் பங்களிக்க வேண்டும்.
டிம் டேவிட்டுக்குப் பதிலாக ஜேகோப் பெத்தேல் அணியில் எடுத்தால் சாதகமாக இருக்கமால் எனக் கணிக்கப்படுகிறது.
சிஎஸ்கே மிடில் ஆர்டர் பிரச்னை
சிஎஸ்கே அணியில் மிடில் ஆர்டர் சொதப்பலாக இருக்கிறது. ஷிவம் துபே, தீபக் ஹூடா, சாம் கர்ரன் மோசமாக விளையாடி வருகிறார்கள்.
பதிரானா சந்தேகம்
பதிரானாவும் காயம் காரணமாக முழுமையாக குணமடையாமல் இருக்கிறார். அதனால் அதையும் சிஎஸ்கே அணி சிந்திக்க வேண்டியுள்ளது.
பதிரானா விளையாடினால் நாதன் எல்லிஸ் வெளியேற்றப்படுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.