செய்திகள் :

பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட நக்சல்களின் உடல்கள் மீட்பு!

post image

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினரின் என்கவுன்டரில் பலியான 3 நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 3 நக்சல்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதில் ஒருவர் ரூ. 25 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த நக்சலான சுதிர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மற்ற மூவரை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அப்பகுதியிலிருந்து இன்சாஸ் ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், நக்சல்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கை பிஜப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இதில் பலியாகும் நக்சல்களின் உடல்கள் மீட்கப்படுவது அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலை மேற்கொண்ட பாதுகாப்புப் படையினரை சத்தீஸ்கர் மாநில முதல்வர் விஷ்ணு டியோ சாய் பாராட்டியுள்ளார். மேலும், துணை முதல்வர் விஜய் ஷர்மா, நக்சல்களின் அச்சுறுத்தலில் இருந்து தங்களை மீட்போம் என அரசு உறுதியளித்துள்ளதாகவும் இதற்காக ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

முன்னதாக, சத்தீஸ்கரில் கடந்த 2023 ஆம் ஆண்டில் பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து கடந்த ஓராண்டில் 2,619 நக்சல்கள் கைது செய்யப்பட்டு, சரணடைந்தும் கொல்லப்பட்டுமுள்ளதாக மார்ச் 21 அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.

மேலும், கடந்த வாரம் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட இரு வேறு தாக்குதல்களில் கொல்லப்பட்ட 30 நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டதுடன் மிகப் பெரியளவிலான ஆயுதக் குவியல்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:இந்தியா - வங்கதேச எல்லையில் கடத்தப்படும் கால்நடைகள்!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் காலமானார்

அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் அதிமுக அதிமுக அமைப்பு செயலாளராக இருந்து வந்த கருப்பசாமி பாண்டியன்(76) உடல் நல குறைவால் புதன்கிழமை காலை காலமானார். மேலும் பார்க்க

இந்தியா - வங்கதேச எல்லையில் கடத்தப்படும் கால்நடைகள்!

மேற்கு வங்கத்திலுள்ள இந்தியா - வங்கதேசத்தின் எல்லையில் 16 கால்நடைகள் மற்றும் போதைப் பொருள் ஆகியவற்றை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மால்டா மாவட்டத்தின் எல்லைப் புறக்காவல் ... மேலும் பார்க்க

விடியோ பதிவிட்ட பத்திரிக்கையாளருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக விடியோ பதிவிட்ட மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.கராச்சியைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளரும் ரஃப்தார் எனும் டிஜிட்டல... மேலும் பார்க்க

பிரதமர் நரேந்திர மோடியுடன் ‘தினமணி’ ஆசிரியர் கி. வைத்தியநாதன் சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியைத் தினமணி நாளிதழ் ஆசிரியர் கி. வைத்தியநாதன் சந்தித்துப் பேசினார்.தில்லியில் பிரதமரை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை சந்தித்த கி. வைத்தியநாதன், தினமணியின் 90 ஆம் ஆண்டு சிறப்பு மலர் ... மேலும் பார்க்க

பலூசிஸ்தானில் அரசுக்கு எதிராக செயல்படும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை: முதல்வர்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் அரசுக்கு எதிராக செயல்படும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலூசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக செ... மேலும் பார்க்க

ஆப்கனில் பெண் கல்வி மீதான தடை தலைமுறைகளைக் கடந்து பாதிக்கும்: ஐ.நா. கண்டனம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் கல்வி கற்க தலிபான்கள் விதித்துள்ள தடையானது தலைமுறைகளைக் கடந்து பாதிக்கும் என ஐக்கிய நாடுகளின் பெண்கள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் புதிய கல்வியாண்... மேலும் பார்க்க