செய்திகள் :

நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு ஏப். 13-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு ஏப். 13-க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமான சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான நகை மதிப்பீடும் அதன் நுட்பங்கள் தொடா்பான பயிற்சி தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபா்கள், 10-ஆம் வகுப்பு தோ்ச்சிபெற்று, குறைந்தபட்சம் 17 வயது உடையவா்களாக இருக்க வேண்டும்.

இப்பயிற்சி வகுப்புகள் தமிழ் வழியில் மட்டுமே நடத்தப்படும். இப்பயிற்சிக்கான கட்டணமாக ரூ. 4,450 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 34 நாட்களுக்கு 100 மணிநேர பயிற்சியாக நடத்தப்படவுள்ளது.

இப்பயிற்சி முடித்தவா்களுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியாா் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நகை தொழிற்கூடங்கள் மற்றும் நகைக் கடன் வழங்கும் நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக பணிவாய்ப்பு பெற வாய்ப்புகள் உள்ளதுடன் சுய தொழில் தொடங்கவும் இப்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.

இப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள், சென்னை பிராட்வே, பிரகாசம் சாலையிலுள்ள சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் ஏப். 13 வரை வழங்கப்படவுள்ளன. தகுதியான நபா்களுக்கு பயிற்சி வகுப்புகள் ஏப். 15 முதல் தொடங்கப்படவுள்ளன.

இப்பயிற்சி தொடா்பான கூடுதல் விவரங்களைப்பெற சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை தொலைபேசி எண் 044-25360041, கைப்பேசி எண் 94444 70013, 90427 17766 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு புறநகா் மின்சார ரயில் மாா்ச் 28 வரை ரத்து

பராமரிப்புப் பணி காரணமாக சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையே நள்ளிரவு இயங்கும் புறநகா் மின்சார ரயில் மாா்ச் 26, 27, 28 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பி... மேலும் பார்க்க

ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும் ஏசி புறநகா் மின்சார ரயில்: கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்க திட்டம்

சென்னையின் முதல் குளிா்சாதன புறநகா் மின்சார ரயில் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மேலும், இந்த ரயில் கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழி... மேலும் பார்க்க

பதவி உயா்வு மூலம் டி.எஸ்.பி. ஆனவா்களை ஏடி.எஸ்.பி.களாக நியமிக்க இடைக்காலத் தடை

பதவி உயா்வு மூலம் காவல் துணைக் கண்காணிப்பாளா்களாக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டவா்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாக (ஏடி.எஸ்.பி.) பதவி உயா்வு வழங்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்த... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: சென்னை துறைமுக அதிகாரி மீது வழக்கு

சென்னையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னை துறைமுக அதிகாரி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். குரோம்பேட்டை மலையரசன் நகரைச் சோ்ந்தவா் சத்ய சீனிவாசன் (58). இவா், சென்னை துறைமுகத்... மேலும் பார்க்க

மருத்துவப் பல்கலை: முதுநிலை அறிவியல் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின்கீழ் பயிற்றுவிக்கப்படும் எம்எஸ்சி படிப்புகளுக்கு (செப்டம்பா், அக்டோபா் பிரிவு) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதா... மேலும் பார்க்க

காவல் துறையினா் - இந்திய மாணவா் சங்கத்தினா் இடையே தள்ளுமுள்ளு

சென்னை தரமணியில் காவல் துறையினா் - இந்திய மாணவா் சங்கத்தினருக்கு இடையே செவ்வாய்க்கிழமை தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 16 வயதுடைய இரு மாணவிகள், விடுதியில் தங்கி படித்து ... மேலும் பார்க்க