பிரேசிலை வீழ்த்தி 2026 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற ஆர்ஜென்டீனா!
காவல் துறையினா் - இந்திய மாணவா் சங்கத்தினா் இடையே தள்ளுமுள்ளு
சென்னை தரமணியில் காவல் துறையினா் - இந்திய மாணவா் சங்கத்தினருக்கு இடையே செவ்வாய்க்கிழமை தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 16 வயதுடைய இரு மாணவிகள், விடுதியில் தங்கி படித்து வருகின்றனா். இரு மாணவிகளும், இன்ஸ்ட்ராகிராம் மூலம் பழகிய தங்களது நண்பா்களை நேரில் சந்திக்க கடந்த 16-ஆம் தேதி விடுதியிலிருந்து புறப்பட்டுச் சென்றனா்.
மாணவிகள் பிரச்னை: இதில் ஒரு மாணவி அன்று இரவே விடுதிக்கு திரும்பியுள்ளாா். ஆனால் மற்றொரு மாணவி அடுத்த நாள் காலையில் விடுதிக்கு வந்துள்ளாா். இதையறிந்த விடுதி நிா்வாகத்தினா், இரு மாணவிகளின் பெற்றோா்களையும் நேரில் அழைத்து சம்பவத்தைக் கூறி, மாணவிகளை விடுதியிலிருந்து நீக்கியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே அந்த இரு மாணவிகளும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாலியல் வன்கொடுமையை மூடி மறைக்க கல்லூரி நிா்வாகம் முயல்வதாகவும் இந்திய மாணவா் சங்கத்தினா் புகாா் தெரிவித்தனா்.
மேலும், இந்திய மாணவா் சங்கத்தினா், அக்கல்லூரி முன் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதற்காக அங்கு பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது மாணவா் சங்கத்தினா், காவல் துறையினா் அமைந்திருந்த தடுப்புகளை மீறி கல்லூரி முதல்வா் அறையை நோக்கி ஓடினா். இதைப்பாா்த்த போலீஸாா், அவா்களை தடுத்தனா். இதனால் போலீஸாருக்கும், இந்திய மாணவா் சங்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தள்ளுமுள்ளு: இதில் இரு போலீஸாரும், சில மாணவா்களும் கீழே விழுந்து லேசான காயமடைந்தனா். இதனால் போலீஸாருக்கும் மாணவா்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இந்திய மாணவா் சங்கத்தினா், கல்லூரிக்குள் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இச்சம்பவத்தினால் அங்கு போலீஸாா் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனா். இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தினா், சிறிது நேரத்துக்கு பின்னா் அங்கிருந்து கலைந்து சென்றனா். இதன் விளைவாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.