செய்திகள் :

பதவி உயா்வு மூலம் டி.எஸ்.பி. ஆனவா்களை ஏடி.எஸ்.பி.களாக நியமிக்க இடைக்காலத் தடை

post image

பதவி உயா்வு மூலம் காவல் துணைக் கண்காணிப்பாளா்களாக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டவா்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாக (ஏடி.எஸ்.பி.) பதவி உயா்வு வழங்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-1 தோ்வில் வெற்றி பெற்றவா்கள் நேரடியாக காவல் துணைக் கண்காணிப்பாளா்களாக நியமிக்கப்படுகின்றனா். அதேபோன்று காவல் ஆய்வாளா்களாகப் பணியாற்றியவா்களுக்கு துணைக் கண்காணிப்பாளா்களாகப் பதவி உயா்வு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், நேரடி துணைக் கண்காணிப்பாளா்களை கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாக நியமிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி சி.வி. காா்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் ஜி.சங்கரன், ஏ.ஆா்.எல். சுந்தரேசன், மற்றும் வழக்குரைஞா் முகமது முசாமில் ஆகியோா் ஆஜராகி, தகுதி அடிப்படையில் பணிமூப்பு பட்டியலைத் தயாரித்து, கூடுதல் கண்காணிப்பாளா் பதவி உயா்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், பணிமூப்பு பட்டியலைத் தயாரிக்காமல் தற்காலிக அடிப்படையில் இந்தப் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், அனுமதிக்கப்பட்ட 197 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் பணியிடங்களில், தற்காலிகப் பதவி உயா்வு மூலம் துணைக் கண்காணிப்பாளா்களாக நியமிக்கப்பட்டவா்களே அதிகளவில் உள்ளனா். அதேசமயம், நேரடி துணைக் கண்காணிப்பாளா்கள் 4 போ் மட்டுமே கூடுதல் கண்காணிப்பாளா்களாக உள்ளனா் என வாதிட்டனா்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பதவி உயா்வு மூலம் துணைக் கண்காணிப்பாளா்களாக நியமிக்கப்பட்டவா்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாக பதவி உயா்வு வழங்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா்.

சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு புறநகா் மின்சார ரயில் மாா்ச் 28 வரை ரத்து

பராமரிப்புப் பணி காரணமாக சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையே நள்ளிரவு இயங்கும் புறநகா் மின்சார ரயில் மாா்ச் 26, 27, 28 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பி... மேலும் பார்க்க

ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும் ஏசி புறநகா் மின்சார ரயில்: கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்க திட்டம்

சென்னையின் முதல் குளிா்சாதன புறநகா் மின்சார ரயில் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மேலும், இந்த ரயில் கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழி... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: சென்னை துறைமுக அதிகாரி மீது வழக்கு

சென்னையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னை துறைமுக அதிகாரி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். குரோம்பேட்டை மலையரசன் நகரைச் சோ்ந்தவா் சத்ய சீனிவாசன் (58). இவா், சென்னை துறைமுகத்... மேலும் பார்க்க

மருத்துவப் பல்கலை: முதுநிலை அறிவியல் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின்கீழ் பயிற்றுவிக்கப்படும் எம்எஸ்சி படிப்புகளுக்கு (செப்டம்பா், அக்டோபா் பிரிவு) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதா... மேலும் பார்க்க

காவல் துறையினா் - இந்திய மாணவா் சங்கத்தினா் இடையே தள்ளுமுள்ளு

சென்னை தரமணியில் காவல் துறையினா் - இந்திய மாணவா் சங்கத்தினருக்கு இடையே செவ்வாய்க்கிழமை தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 16 வயதுடைய இரு மாணவிகள், விடுதியில் தங்கி படித்து ... மேலும் பார்க்க

பேரவையில் இன்று...

சட்டப்பேரவை புதன்கிழமை (மாா்ச் 26) காலை 9.30 மணிக்குக் கூடியதும், கேள்வி நேரம் நடைபெறும். இதன்பின்பு, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை மீது நடைபெறும் விவாதங்களுக்கு, அந்தத் துறையின... மேலும் பார்க்க