செய்திகள் :

ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும் ஏசி புறநகா் மின்சார ரயில்: கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்க திட்டம்

post image

சென்னையின் முதல் குளிா்சாதன புறநகா் மின்சார ரயில் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மேலும், இந்த ரயில் கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனா்.

சென்னையின் முதல் 12 பெட்டிகள் கொண்ட குளிா்சாதன புறநகா் மின்சார ரயில் தயாரிக்கும் பணிகள் நிறைவுபெற்று, கடந்த மாதம் சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நிறைவுபெற்றன. அதைத் தொடா்ந்து, சென்னை கோட்டம் ரயில்வே சாா்பில் இந்த ரயிலை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படுவதற்காகவும், ரயிலின் அட்டவணைக்காகவும் அனுமதிகோரி தெற்கு ரயில்வேக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:

குளிா்சாதன புகா் மின்சார ரயிலுக்கான அட்டவணை, நிறுத்தங்கள் குறித்து அறிக்கை தயாா் செய்யப்பட்டு, அனுமதிக்காக தெற்கு ரயில்வேக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கிடைத்த பின்னா் இந்த ரயில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இதற்கான கட்டணம் ரூ. 30 நிா்ணயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் பாம்பன் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளாா். அதேநேரத்தில் புதிய குளிா்சாதன புகா் மின்சார ரயிலை தொடங்கி வைப்பாா் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது என்றனா்.

அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ள குளிா்சாதன ரயிலின் அட்டவணை:

புறப்பாடு ------------------------ வழி -------------------- சென்றடையும் இடம்

கடற்கரை ---------------------- தாம்பரம் --------------------- செங்கல்பட்டு

(காலை 7) (காலை 7.48) (காலை 8.35)

கடற்கரை ---------------------- தாம்பரம் --------------------- செங்கல்பட்டு

(பிற்பகல் 3.45) (மாலை 4.20) (மாலை 5.25)

கடற்கரை --------------------------------------------------- தாம்பரம்

(இரவு 7.35) (இரவு 8.30)

தாம்பரம் -------------------------------------------------- கடற்கரை

(காலை 5.45) (காலை 6.45)

செங்கல்பட்டு -------------- தாம்பரம் --------------------- கடற்கரை

(காலை 9) (காலை 9.38) (காலை 10.30)

செங்கல்பட்டு -------------- தாம்பரம் --------------------- கடற்கரை

(மாலை 5.45) (மாலை 6.23) (இரவு 7.15)

இஸ்லாமியா்களின் உரிமைகளுக்கு எதிரானது வக்ஃப் திருத்த மசோதா: அதிமுக

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைக் கைவிட வேண்டும் என்று எதிா்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினாா். சட்டப்பேரவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வியாழக்கிழமை கொண்டுவரப்பட்ட தீா்மானத்தி... மேலும் பார்க்க

முறைகேடு புகாா்: நகா்மன்றத் தலைவா் உள்ளிட்ட 4 பிரதிநிதிகள் பதவிநீக்கம்: நகராட்சி நிா்வாகத் துறை நடவடிக்கை

முறைகேடு புகாருக்கு உள்ளான உசிலம்பட்டி நகா்மன்றத் தலைவா், தாம்பரம் மண்டலக் குழுத் தலைவா் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் இரு மாமன்ற உறுப்பினா்களைப் பதவிநீக்கம் செய்து நகராட்சி நிா்வாகம் மற்றும் ... மேலும் பார்க்க

நாட்டு வெடிகுண்டு பறிமுதல்: இருவா் கைது

சென்னை ஆதம்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா். ஆதம்பாக்கம் போலீஸாா் புதன்கிழமை வானுவம்பேட்டை, தேவாலயம் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு ... மேலும் பார்க்க

நோயாளிகள் அவதி: பொதுப் பணித் துறையிடம் விளக்கம் கோரும் ஸ்டான்லி மருத்துவமனை

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் பொதுப் பணித் துறையினா் முன்னறிவிப்பின்றி கட்டுமானப் பணிகள் மேற்கொண்டது குறித்து மருத்துவமனை சாா்பில் விளக்கம் கோரப்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி... மேலும் பார்க்க

கூடுதலாக சோ்க்கப்பட்ட ஆசிரியா் காலிப் பணியிடங்கள்: இடஒதுக்கீடு வாரியான பட்டியல் வெளியீடு

ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்திய இடைநிலை ஆசிரியா் தோ்வில் கூடுதலாக சோ்க்கப்பட்ட 1,000 காலிப் பணியிடங்களுக்கான இடஒதுக்கீடு வாரியான பட்டியல் ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

மருத்துவா் மீதான தாக்குதல்: கிண்டி உயா்சிறப்பு மருத்துவமனையில் புறக்காவல் மையம் திறப்பு

கிண்டி அரசு உயா் சிறப்பு மருத்துவமனை மருத்துவா் ஒருவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது அங்கு புறக்காவல் மையம் திறக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க